தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா
ஈஷ்வர், சுகிப் மற்றும் கவின் மூவரும் எப்படி எங்கே என்னமாதிரி செயல்படவேண்டும் என்று பேசியபடி இருக்க, கங்காதர் உடன் பேசிக்கொண்டு இருந்தாள் பௌவ். ஏதோ ஒரு இடத்தில் இங்கே வர என்ன செய்வது எந்த சந்தேகமும் வராமல் எப்படி இங்கே நாம் பதுங்க முடியும்? என்று ஈஷ்வர் கேட்க கவினோ பார்கலாம் பா நான் ஏதாவது வழி யேசிக்கிறேன் என்று கூர, ஈஷ்வரும் சுகிப்பும் கவினை பார்தபடி இருந்தனர். திடீர் என்று பௌவ் அந்த சமயத்தில் இவர்களின் உரையாடளுக்குல் நுழைந்தாள்.
நீங்க எப்படி யோசித்தாலும் வழி கிடைக்காது ஆபிசர் சார். நம்ப சுகிப் யோசித்தால் கிடைக்கலாம் என்றாள்.
நானா ? என்னால எப்படி வழி கிடைக்கும்? என்ன உலருகிறாய்?
நான் ஒன்னும் உலரல அன்ணா பேசும்போது என் எம்ப்லாயீயை சைட் அடிக்காம யோசித்து இருந்தால் தெரிந்து இருக்கும். அந்த வழியை நல்லா இன்னொரு முறைப் பாரு என்றாள்.
சுகிப் அவளை பார்த்து முழிக்க , நீங்க சொன்ன வழி ரிஷவன்ஷ் எஸ்டேட் கேட் அண்ணா. அது பூறாவும் உங்க ஏரியா தானே சுகிப் ஜீ என்றாள் சாதாரணமாக.
அட அமாம்ல சீ.... இப்படி வேடிக்கை பார்த்து பல்ப் வாங்கிடேனே... என்ற சுகிப் பௌஷியைப் பார்க இப்போதும் அவள் கங்காதருடன் எதையோ முக்கியாமாக பேசியபடி இருந்தாள்.
இவ அங்க பேசுறா இங்க கேட்டுக்கிட்டு இருந்த நமக்கு புரியாதது அவளுக்கு எப்படி புரிஞ்சிது? சைட் அடித்ததை கூட பார்த்து இருக்கா பேய்.... மனதில் சுகிப் யோசிப்பதாக நினைத்து வெலியே சொல்லிவிட, சுகிப் சார் நீங்க கொஞ்சம் வாய்ஸ் கம்மி பன்னுங்க என் தங்கச்சிக்கு அவ இவனு கூப்பிட்டா அறவே பிடிக்காது. டி போட்டு கூப்பிட்டா கொலையே விழும் என்றார் கவின்.
அப்படியா சொல்ரீங்க டி னு சொன்னா அவ்லோ கோவம் வருமா மேடமுக்கு என்று கேட்டது ஈஷ்வர்.
அட ஆமாம் ஜீ... என் வைப் மேடமோட ப்ரென்ட்னு சொல்றதுக்கு பதிலா அவங்க அடியாலுனு சொன்னா தான் சரியா இருக்கும். இவங்க பன்ன அட்டகாசம் எல்லாம் கேட்க கேட்க சலிக்கவே சலிக்காது. நான் ஒரு ஆர்ப்பனேஜ்ல வலர்ந்தவன். எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. என் வைப் எனக்கு வைப்பானது மேடம்மால தான். இவங்க காலேஜ்ல கல்சுரல்ஸ் நடந்தது. அப்ப ஒரு பிக் ஷாட்டை இன்வைட் செய்து இருந்தாங்க நான் செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆக வந்து இருந்தேன்.