வாழ்க்கையில் வந்து போகும்
வருத்தங்கள் எல்லாம்
வழியில்லாமல் அழிந்து போகிறது
வந்து கொண்டே இருப்பதனால்...
மகிழ்ச்சி தரும் தருணங்களும்
மனதில் நிலைக்காமல் போகிறது
மனதை சிறை செய்திருக்கும்
மறக்க இயலா சில நினைவுகளால்...
கடந்து போன காலங்கள்
திரும்பி வருவதில்லை ஒரு போதும்
கிடைக்கும் நொடிகள் ஒவ்வொன்றையும்
மகிழ்ச்சியாக கழித்து விடு
நினைத்து பார்க்கும் நாட்களில்
நினைவுகளில் மலரும் வண்ண பூக்களாய்...