(Reading time: 1 minute)

வாழ்க்கையில் வந்து போகும் 

வருத்தங்கள் எல்லாம்

வழியில்லாமல் அழிந்து போகிறது 

வந்து கொண்டே இருப்பதனால்... 

 

மகிழ்ச்சி தரும் தருணங்களும்

மனதில் நிலைக்காமல் போகிறது 

மனதை சிறை செய்திருக்கும்

மறக்க இயலா சில நினைவுகளால்... 

 

கடந்து போன காலங்கள் 

திரும்பி வருவதில்லை ஒரு போதும் 

கிடைக்கும் நொடிகள் ஒவ்வொன்றையும் 

மகிழ்ச்சியாக கழித்து விடு

நினைத்து பார்க்கும் நாட்களில் 

நினைவுகளில் மலரும் வண்ண பூக்களாய்... 

2 comments

  • Good morning dear Jeba! இந்த ஃபிளெக்சி பகுதியில் தங்கள் கவிதை வெளிவருகிறது தவிர, தாங்கள் இதை திரும்பிப் பார்ப்பதில்லை! இருப்பினும், நான் என் கடமையை செய்யத்தானே வேண்டும்! தங்கள் கவிதைகள் எல்லாமே கவிநயத்தோடு வாழ்க்கை முறைகளையும் அகற்றுதல் தருகிறது! பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.