யாழின் கையில் சிக்காமல் ஓடியவன் “யாழ் குட்டி வேண்டாம் டா மீ பாவம் நீ சொல்றபடியே இந்த அண்ணன் கேட்க்குறேன்” என்று பேசியபடியே யாழின் பின்னால் சென்று இலாவகமாய் அவள் கையில் இருந்த கட்டையை பறித்திருந்தான்.
“போடா மங்கூஸ் மண்டையா உனக்கு போய் நான் அட்வைசு செய்தேன் பார்த்தியா என்னை தான் சொல்லனும்” என்று யாழ் சலித்துக்கொள்ள
“சாரி குட்டி சாத்தான் நீ சொன்னதுலாம் எனக்கும் புரியுது அவகிட்ட பேச தான் கொஞ்சம் பயமா இருக்கு” என நந்தன் சமாதானமாய் கூற
“அண்ணா நாங்க வேணும்னா பேசவா” என்று கொளசி எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
“வேண்டாம் டா சாமி. அவளுக்கு நாளைக்கு பிறந்தநாள் வேற நானே நாளைக்கு பேசுறேன். நீங்க போய் எந்த குட்டையையும் குழப்பி விடாம இருந்தா சரி” என்று சலித்துக்கொண்டான். யாழும் கொளசியும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டு “அது அந்த பயம் இருக்கட்டும்” என ஒரே மூச்சாய் எச்சரித்தனர்.
இவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியே. யாழ் ஏதோ யோசனை வந்தவளாய் “டேய் நந்து இப்போ டைம் என்ன?” என்று கேட்க
“11.30 டி குட்டி சாத்தான்…. ஆமா இப்போ எதுக்கு நீ டைம் கேட்ட?” என்றவனை நோக்கி “நீ மங்கூஸ் மண்டை மட்டும் இல்ல டா சரியான மரமண்டை… 12 ஆக இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு நீ ஷர்ப்பா 12 க்கு ப்ரியாவை பார்க்க போ. அவங்க ஹேப்பி ஆகிடுவாங்க” என்று குதூகலிக்க
“அய்யயோ இந்த குட்டி சாத்தான் எதையோ ப்ளான் பண்ணிடுச்சு போலையே. காலைல அவ கிட்ட திட்டு வாங்கிக்கலாம்னு பார்த்தா இவ இந்த அர்த்த ராத்திரிலே என்ன க்ளோஸ் பண்ண பாக்குறாளே” என்று தன் மனதினுள்ளே புலம்பியவன் யாழிடம் “காலைல பேசிக்குறேன் யாழ்” என்று கூற
“உனக்குலாம் லவ் செட்டே ஆகாது டா” என தன் தலையிலே அடித்துக்கொண்டாள்.