(Reading time: 1 - 2 minutes)

                                              வேண்டுகிறேன்

மனதினில் ஆயிரம் கேள்வியுடனே

                     என்னை தந்தேன் உன்னிடத்தில்
வருடமோ சென்றது , கேள்விக்கும் பதிலில்லை

         என் மனம் கொண்ட அன்பிற்கும் விடையில்லை , இருவரின் மனமும் ஒன்றவில்லை
நீயோ வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்றாய்
          நானோ அது அத்தியாவசியம் மட்டுமே என்றேன்
உன் பிறந்த வீட்டில் எதுவம் இல்லை என்றாய்
               என் நிலை அறிந்து தானே என்னை மனம் கொண்டாய் என்றேன்
வருடங்கள் மூன்று ஆனது
              என் மனமோ உன் அன்பிற்கு ஏங்குது
தவறுகள் நான் புரிந்தால் மன்னித்து விடு
               சுடு சொற்கள் கூறுவதை நிறுத்தி விடு
அடிபட்ட காயம் கூட ஆறி விடும்
             சொல் பட்ட காயமது வடு ஆகிடும்
உன் மனமதை நான் அறிந்திட்ட போதிலும்
             என் மனமதை நீ அறியாதது ஏனோ
நான் கொண்ட கனவுகளை அழித்துவிட்டேன் உனக்காக
               நீ கொண்ட கர்வமதனை விடமாட்டாயோ எனக்காக
வேண்டுகிறேன் நான் உன்னிடத்தில்
            என் உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பு கொடு இந்த வாழ்வதனில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.