Chillzee KiMo Book Reviews - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா [En mel undranukkethanai anbadi - Sasirekha]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா [En mel undranukkethanai anbadi - Sasirekha]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
பெரிய ஜவுளிக் கடை சொந்தக்காரரின் மகம் சம்யுக்தாவிற்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணம் ஒரு தாதாவினால் நின்றுப் போகிறது. அந்த சம்பவத்தால் அவளுடைய அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் கொதித்துப் போகும் சம்யுக்தா, நியாயம் கேட்க அந்த தாதா தில்லையிடமே நேரே செல்கிறாள். தில்லை கல்யாண மாப்பிள்ளை நல்லவன் இல்லை அதனால் தான் கல்யாணத்தை நிறுத்தினேன் என்று சொல்கிறான். அதை நம்ப மறுக்கிறாள் சம்யுக்தா. எதிர்பாராமல் ஒரு நேரத்தில் கோபத்தில் சம்யுக்தா கழுத்தில் தாலி கட்டி விடுகிறான் தில்லை.
என்கவுன்டரில் தில்லை இறந்து விட்டதாக அறிவிக்கிறது காவல்துறை. இதை ஏற்க மறுக்கிறாள் சம்யுக்தா. போலீஸ் ஸ்டேஷனிற்கு நேரே சென்று அவளுடைய கணவன் சாகவில்லை என்று சொல்லி அடம் பிடிக்கிறாள். ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தவிர வேறு யாரும் அவளின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள்.
சம்யுக்தா நினைப்பதுப் போல தில்லை உயிரோடு இருக்கிறானா? தில்லை உண்மையில் நல்லவனா கெட்டவனா? போலீஸ் ஏன் அவனுடைய என்கவுன்டர் பற்றிய விபரங்களை மர்மமாக மறைத்து வைத்திருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்லி இருக்கிறார் சசிரேகா.
காதல், குடும்பம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சக நாவல்.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீ பகிர்ந்திருக்கும் நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ [Naan avalil paripooranam - Sri] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா [En mel undranukkethanai anbadi - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா