Comedy Stories - என் மனைவிக்கு காது கேட்கலை!
ஒரு கணவனுக்கு தன் மனைவிக்கு காது கேட்கவில்லை என்ற சந்தேகம் வந்தது. அவளுக்கு காது கேட்கும் கருவி தேவை என்றும் அவன் யோசித்தான்.
ஆனால், இதைப் பற்றி அவளிடம் எப்படி பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை!
அதனால் குடும்ப டாக்டரை அழைத்து பிரச்சனையை சொன்னான்.
டாக்டரும் அவனின் மனைவிக்கு உண்மையாக காது கேட்கவில்லையா என்று தெரிந்துக் கொள்ள ஒரு ஈசி டெஸ்ட் இருப்பதாக சொன்னார்.
“நீங்க உங்க மனைவியிடமிருந்து தோராயமா 40 அடி தூரத்தில் நின்னு சாதாரணமா பேசுற மாதிரி பேசி அவளுக்கு கேக்குதான்னு பாருங்க. இல்லை என்றால் 30 அடி, பிறகு 20 அடி என்று பதில் வரும் வரை பக்கத்துல போயிட்டே இருங்க,” என்றார் டாக்டர்.
அன்று மாலை, மனைவி சமையலறையில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். கணவன் வராண்டா பக்கத்தில் இருந்தான்.
‘இங்கே இருந்து 40 அடி தூரம் இருக்கும். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.’ என யோசித்தான் கணவன்.
அங்கே இருந்து சாதாரண குரலில், “டார்லிங், இன்னைக்கு டின்னர் என்ன?” எனக் கேட்டான்.
பதில் இல்லை.
அடுத்து சுமார் 30 அடி தூரத்தில் நின்று 'டியர், டின்னர் என்ன?' என மீண்டும் கேட்டான்.
இப்போதும் பதில் இல்லை.
அடுத்து மனைவியிடமிருந்து 20 அடி தூரத்தில் இருக்கும் சாப்பாட்டு அறைக்குள் சென்று, 'டார்லிங், டின்னர் என்ன?” எனக் கேட்டான்.
மீண்டும் பதில் இல்லை.
அடுத்து சுமார் 10 அடி தூரத்தில் சமையலறை கதவு பக்கத்தில் சென்று, “டியர், டின்னர் என்ன?” என்றுக் கேட்டான்.
இப்போதும் பதில் இல்லை.
கடைசியாக மனைவியின் பக்கத்தில் சென்று, “டார்லிங், டின்னர் என்ன?” என்றுக் கேட்டான்.
“கடவுளே எத்தனை தடவை சொல்றது? அஞ்சாவது தடவை சொல்றேன்!!! இன்னைக்கு டின்னர் சிக்கன்!!!!”
🤦🤦♂️🤫😏 🤐🙊
யாருக்கு காது கேட்கலைன்னு நினைக்குறீங்க???!!!!!
😀😀😀😀😀