Comedy Stories - பாட்டியின் ரகசியம்!
சுமதி ஒரு முழு மீனை வறுவல் செய்ய தயார் செய்துக் கொண்டிருந்தாள்.
சுத்தம் செய்த மீனின் வால் பகுதியில் இருந்து ஒரு சின்ன துண்டை வெட்டிய பிறகு, அதில் மசாலா சேர்த்து வறுவல் செய்ய கடாயில் வைத்தாள்.
அவளுடைய தோழி அவளிடம், "ஏன் மீன் ஓரத்தில் வெட்டினாய்?" என்றுக் கேட்டாள்.
சுமதி, "இது எங்க குடும்ப ரகசியம். எனக்கு முழு ரீசன் தெரியாது. என் அம்மா அப்படி தான் எப்போவும் செய்வாங்க. அதனால நானும் செய்வேன். அதனால தான் நல்ல டேஸ்ட்டா இருக்குன்னு நினைக்கிறேன்." என்றாள்.
இரண்டு நாள் கழித்து தன் அம்மாவிடம் பேசும் போது சுமதி, மீன் வறுவல் செய்யும் போது எதுக்கு மீனோட ஒரு பக்க துண்டை வெட்டனும்? இதுக்கு பின்னால இருக்க ரகசியம் என்னன்னு அம்மாவிடம் கேட்டாள்.
அவளுடைய அம்மா, "எனக்கு முழு காரணம் தெரியாது. என் அம்மா எப்போதும் அப்படித் தான் செய்வாங்க. அதன் பின்னால இருக்க ரகசியம் சரியா தெரியலை. அதனால தான் டேஸ்ட் அதிகமாகுதுன்னு நினைக்கிறேன்." என்றாள்.
சில வாரங்களுக்குப் பிறகு, தன் பாட்டியைப் பார்க்கச் சென்ற சுமதி, பாட்டியிடம், "பாட்டி, ஏன் நீங்க மீன் வறுவல் செய்யும் போது ஓரத்துல இருந்து துண்டை வெட்டுறீங்க? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லுங்க,” எனக் கேட்டாள்.
அவளுடைய பாட்டி என்ன சொன்னானங்கன்னா,
"என் கடாயில முழு மீன் எப்போவும் பத்தாது. அதனால் வெட்டி அதுல போடுவேன்”!!!!!
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ 😁😁😁😁😁
😀😀😀😀😀