(Reading time: 9 - 17 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

நர்மதா போனாள். அலமாரியிலிருந்து நெய் புட்டியை எடுக்கும்போது பாலுவின் கரம் அவள் தோளைப்பற்றி அழைத்தது.

  

''வேண்டாங்க"

  

" என்னது”

  

"வேண்டாங்க. உங்களைப் பார்க்கச்சே யெல்லாம் மனசாலே பாவம் பண்ணிண்டு இருக்கேன்'

  

"அது தான் பெரிய்ய தப்பு"

  

கைகளின் அழுத்தம் அதிகமாகியது. இருவரும் போளி, நெய் என்கிற விஷயங்களை மறந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நர்மதா கனவில் நடப்பது போல அவனுடன் படுக்கை அறைக்குள் சென்றாள். அவளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு பலிஷ்டனான ஆணின் ஸ்பரிசத்தால் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பாலு அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை தீர்க் காமமாகப் பார்த்தான்.

  

" நர்மதா! ஏன் இப்படி ஏமாந்தே?"

  

"எனக்கு என்ன தெரியும்? இதையெல்லாம் கல்யாணத்துக்கு முன்னே எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?"

  

அவள் அழுதாள். கண்களின் மை கரைந்து கன்னத்தில் கோடாக இறங்கியது.

  

'இப்ப ஒண்ணும் முழுகிப்போகலை. நீயும், நானும்..."

  

'அதெல்லாம் பாவம்ங்க... பரம சாதுவாக, ஒண்ணு தெரியாத மனுஷனை நான் ஏமாத்த விரும்பலே"

  

"நீ எப்படியும் யார் கிட்டேயாவது ஏமாறத்தான் போறே"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.