(Reading time: 9 - 17 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

'இந்த மாதிரி ஜோடி சேர்ந்திருந்தா தேவலை'

  

இப்படியே மூணு நாளும் கங்கம்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்புறம் ஒய்ந்து விடுவாள். இந்த கெடுவுக்கு மேல் இனிமேல் குளிக்கமாட்டாள் என்று நினைப்போ என்னவோ.

  

குளித்த அன்று தலை கொள்ளாத ஜாதி மல்லிகையும், அலங்காரமுமாகத் திகழ்ந்தாள் அவள். "ஸ்வாமிக்குப் பால் நைவேத்யம் பண்ணிட்டு அவன் பிரசாதமாக உள்ளே எடுத்துண்டு போ. சரியா நடந்துக்கோ.”

  

கொஞ்சம் கூட தம்பியின் மேல் சந்தேகம் வரவில்லை அவளுக்கு. எல்லா பழி பாவங்களும் பெண்களைச் சார்ந்தவை என்கிற குருட்டு நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

  

பாலு வேலைக்குப் போகாத நாட்களில் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தான்.

  

"பூரணி இல்லாம ரொம்ப இளைச்சுட்டே” என்று கங்கம்மா அவனுக்கு உபசாரம் செய்தாள்.

  

''உன் பொண்டாட்டியோட இவளும் போட்டி போடணும்னு பார்க்கிறேன். இவளானால் மாசம் தவறாம கொல்லையில் போய் உட்காந்துடறாள்.

  

"கொஞ்சநாள் போட்டமே. இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் ப்ரீயா இருந்துட்டுப்போறா” என்றான் பாலு அழுத்தமான சிரிப்புடன்.

  

'போகலாம் தான். ஆனாக்க எனக்கு எனக்கு வயசாயிண்டு வரதேப்பா. அடிக்கடி தலையைச் சுத்தறது. படபடப்பா வேறே இருக்கு. எதுவுமே காலத்துலேபூக்கணும், காய்க்கணும். கொல்லையிலே பாரிஜாத மரத்தைப் பார்த்தியோ? ஒரு தூத்தல், வர்ஷிக்க வேண்டியது தான். பூவாப் பூத்துக் கொட்டறது. என் கதை வேறே. கிழவனைக் கட்டிண்டு... என்னத்தைக் கண்டேன். இவா இப்படியில்லையே.

  

பாலுவுக்கு அவள் பேரில் இரக்கமாக இருந்தது. "பகவான் தான் வழி காட்டணும்” என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.