(Reading time: 9 - 17 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

பரமார்த்தமாக, சாதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

  

அன்றைக்கு என்னவோ விசேஷம். போளி பண்ணியிருந்தாள் கங்கம்மா. சமையலறைக்குள் போனவள், "அடடே! அந்தப் பையனுக்கு நாலு குடுத்திருக்கலாமே! மறந்து போச்சே, நீ போய்க் குடுத்துட்டு வாயேன்" என்றபடி தட்டில் எடுத்து வந்தாள்.

  

"நான் போகலை..."

  

"போனா என்னடி? உன் கூடப் பொறந்தவன் மாதிரி"

  

நர்மதா பாலுவின் வீட்டுக்குள் போனாள்.

  

அவன் அவளை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் பார்த்து "என்ன கொண்டு வந்திருக்கே?"

  

"போளி.. அக்கா தான் அனுப்பினா'

  

மேஜை மீது வைத்தாள்.

  

நான் போயிட்டு வரேன்" பூரணி அக்கா எப்போ வருவா?" என்று கேட்டாள்.

  

"மசக்கை, மயக்கம் எல்லாம் தெளிந்தப்புறம்தான். என்னை நாலஞ்சு மாசமா பட்டினி போட்டுட்டா..."

  

"மத்தியானம் கூட எங்க வீட்லே சாப்பிட்டீங்க. பட்டினியா?'

  

"நான் அந்தப் பட்டினியைச் சொல்லலே. வேறே பட்டினி!"

  

நர்மதாவுக்குப் புரிந்தது.

  

"போளிக்கு நெய் போட்டுண்டா நன்னா இருக்கும். சமையல் உள்ளே இருக்கு''

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.