(Reading time: 12 - 23 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

  நான் ஒன்றும் பேச முடியாமற் போய்விட்டேன். பானு குடும்ப வாழ்க்கையில் இன்பம், மகிழ்ச்சி அனுபவிப்பதில்லை. நான் ஊகித்த பயங்கரங்கள் யாவும் உண்மையாகிக் கொண்டிருந்தன.

 

  "பானூ!" என்றேன் உணர்ச்சியில்லாமல். " உன் அறிவாற்றல்களால் மாமாவெ மாத்த முடியாமெ போயிட்டியா?"

 

  "உன் திறமையால் கல்லெ மனுஷனாக்க முடியுமா? மனுஷங்கள்ளே கல்லுங்ககூட இருக்குமுன்னு எனக்கு எப்பவும் தெரியாமெ போயிட்டது."

 

  "பானூ! நீ ரொம்ப அவசரப் படறே தெரியுமா! ஒரு மனுஷனெ விஷம்னு சொல்றதுக்கு காரணங்க பல வேணும். சீட்டாட்டங்கறது ரொம்ப சின்ன விஷயம்."

 

  பானு பேசவில்லை. நானே சொன்னேன் -- முதல்லெ உன் முயற்சிகளெ நீ பண்ணிப் பாத்தியா?"

 

  பானுவின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்து கொண்டிருந்தது. " நான் முழுசும் தோத்துப் போயிட் டேன் அண்ணா! இன்னக்கி என் கர்வம் எல்லாம் அழிஞ்சிபோச்சி. இந்த ரெண்டு வருஷத்தலெ எத்த னெயோ உண்மைகளெத் தெரிஞ்சிகிட்டேன்." கண் களைத் துடைத்துக்கொண்டாள். " இந்த நிமிஷம்வரெ என் கஷ்ட சுகங்களெ யாரிடமும் சொல்லிக்கலெ. சொல் லப்போனா அம்மாவுக்கு, சுசீலாக்குக்கூட தெரிவிக்கலெ. மனசுலெ குழப்பம் நிறஞ்சப்பொ எல்லாம் என்னக்காவது ஒருநாள் உன் ஒருத்தன்கிட்டே மட்டும் சொல்லிக் கணும்னு நினெப்பு வரும். உன்னெத்தவர எனக்கு யாரு மில்லெ. உனக்கு என்ன சொல்றது, எப்படிச் சொல்றது? நான் எவ்வளவோ சந்தோஷமா, சுகமா வாழறேன்னு கனவு கண்டு வரும் உனக்கு உண்மையெ எப்படிச் சொல்ற தண்ணா?" தலையணை மேல் சாய்ந்து விட்டு கேவிக் கேவி அழத் தொடங்கினாள். பானு ஏன் இப்படிப் பைத்தியக்காரி போல ஆகிவிட்டாள்? பார்க்கப் பார்க்க வியப்பு பெருகியது.

 

  "மாமா அடிக்கடி சீட்டாடிக்கிட்டு இருக்காறா?" என்று கேட்டேன் மெதுவாக.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.