(Reading time: 5 - 10 minutes)
Muthu Sippi
Muthu Sippi

உங்களிடம்தான் இருக்கட்டும்? தேவைப்பட்ட போது வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறி விட்டார் சுவாமிநாதன்.

  

ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் சில நூறு ரூபாய்கள் வாங்கி எங்கோ ஆதரவு இல்லாமல் தவிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு அனுப்பி வைத்தார். பிறகு அவர் ஒன்றும் கேட்கவில்லை. ஸ்ரீதரன் மட்டும் சுவாமிநாதன் பேரில் பாங்கில் மாதா மாதம் பணம் கட்டி வந்தார். சில ஆயிரங்கள் அவர் பேரில் சேர்ந்திருந்தன.

  

சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் சுவாமிநாதன் ஒரு வரும் கூறாமலேயே அறிந்து கொண்டார்.

  

"என்ன ஐயா ஊரெல்லாம் பேசிக்கறாங்களே. நம்ப மூர்த்தி ஐயா ஏதோ தண்டாவில் மாட்டிக் கிட்டா ராமே..." என்று தோட்டக்காரன் ராமையா அவரை விசாரித்தான்.

  

"எனக்கு ஒன்றும் தெரியாதப்பா..." என்றார் அவர். தமது கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

  

"இந்த மாதிரி கவுரவம் வாய்ந்த மனிதருக்கு வந்து வாய்த்தானே! எங்கே பார்த்தாலும் அவனைப் பற்றித் தான் பேச்சு" என்றார் புது சமையற்காரர்.

  

அப்புறம் கார் டிரைவர் அவரிடம் தன் மனத்தாங்கலை வெளியிட்டார். வைத்தியசாலை - கம்பவுண்டர்' வந்து கூறி அலுத்துக் கொண்டார்.

  

டாக்டர் மட்டும் ஏதும் கூறவில்லை . ஆனால் அவர் உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது சுவாமி நாதனுக்குத் தெரிந்து விட்டது.

  

ராதா தன் எதிரில் வரும் போதெல்லாம் சுவாமிநாதன் கோபமும், வருத்தமும் அடைந்தார். ஒரு பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் விளைய வேண்டியிருக்க, அவமானம் நேர்ந்து விட்டதே என்பதுதான் அவர் வருத்தத்துக்குக் காரணம்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.