என்றாள் கோமதி.
”என் சயன்ஸ் நோட்டுப் புஸ்தகம் எங்கே சுமதி? நீ எடுத்தாயா அதை?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் பாலு.
“நான் எதற்கப்பா அதையெல்லாம் எடுக்கிறேன்? நீ தானே நேற்று ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாய்! துரைக்கு மறந்து போச்சு போலிருக்கு. அவ்வளவு மயக்கம் இப் பொழுதிலிருந்தே" என்றாள் சிரித்துக்கொண்டே சுமதி.
பாலு சுமதியைக் கோபத்துடன் பார்த்தான்.
”எங்கே மறுபடியும் என்னைப்பற்றி - குரங்கு மூஞ்சி பாலு' என்று எழுதியிருப்பாயோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது!"
பவானி இவர்கள் இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தவள் திடீரென்று, 'பாலு! நான் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போகிறேன். அப்படியே உன் நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வருகிறேன" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அவள் டாக்டர் வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச் சென்று கிடந்தது. முன்பிருந்த களையும், அழகும் அந்த வீட்டில் காணப்படவில்லை. கூடத்தில் ஒருவரும் இராமற் போகவே, பவானி இரண்டாங் கட்டுக்குச் சென்றாள்.
அங்கே உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். இளமையின் எழிலோடு விளங்கிய அந்தப் பெண் இப்போது நிறம்மாறி இளைத் துப் போய் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் துயரம் ஏற்பட்டது.
”வாருங்கள். அண்ணா சற்றைக்கெல்லாம் வந்து விடுவார். உங்களுக்குப் பரீட்சை ’பாஸ்' ஆகிவிட்டதாமே! டாக்டர் காமாட்சி நேற்று வந்திருந்தார். அவர் தான் சொன்னார். மேலே என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் ராதா.
மனதுக்குள் குவிந்து போயிருக்கும் துயரச் சுமையை மறைத்துக்கொண்டு பேசும் ராதாவின்