(Reading time: 5 - 9 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

இவள் உங்கள் பெண் ஜெயஸ்ரீதானே? பார்த்து நாள் ஆயிற்று."

  

ஆமாம், பெரியவளாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் ..."

  

"அப்படியா? மிகவும் சந்தோஷம். வரன் தகைந்து விட்டதா?" என்றேன்.

  

அநேகமாகத் தகைந்த மாதிரிதான்" என்று கூறி விட்டு .. போலு! இங்கே வா" என்று அழைத்தார் அவர்.

  

சுருண்ட கேசத்தையுடைய அந்த அழகிய வாலிபன் பெட்டிக்குள் வந்தான்.

  

"இவன் தான் அம்மா எனக்கு வரப்போகும் மருமகன். அந்த அம்மாள் தான் இவன் தாய். அந்தப் பெண் என் தங்கை" என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் டாக்டர்.

  

ரயில் கிளம்புவதற்கு அறிகுறியாக கார்டு பச்சைக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆட்டினார். வெளியே நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந் தது. பவானி தன் கைகள் இரண்டையும் கூப்பி அனைவ ரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள்.

  

ரயில் வேகமாக நகரத் தொடங்கியது. மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை என்று ஊர்கள் நகர்ந்து கொண்டே வந்தன. தாம்பரத்தையும் தாண்டி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

  

என் எதிரில் உட்கார்ந்திருந்த பவானி என்னைப் பார்த்து “ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலையாக இருக்கிறீர்களா? கையில் ஏகப்பட்ட காகிதங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சை விடைத்தாள்களா அவை?" என்று கேட்டாள்.

  

நான் லேசாகச் சிரித்தேன்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.