"இந்தக் கடையில இஸ்ட்ராங்கா டீ போடச் சொல்லி குடிச்சிட்டு, இப்போதான் அதோ அந்த இரும்புக் கடைக்குள்ள போனாள்."
காவலர்களில் ஒருவர், கடைக்காரரை அதட்டினார் :
“ஏண்டா டேய், உன் கடையிலேயே டீ குடிச்சிட்டுப் போயிருக்காள்; நீ பேமானி மாதிரி பேசாம இருக்கே... கடைய இழுத்து மூடணுமா?”
அவர்களின் வேகத்தைப் பார்த்து உற்சாகப்பட்ட இளங்கோ,சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அவர்கள், பேசாமல் நிற்பதைப் பார்த்து விட்டு அவசர அவசரமாய் பேசினான்:
"வாங்க போகலாம் சார். அந்த கடைக்குள் போய் அவளைப் பிடிக்கலாம் சார்."
"அவசரப்படாத கண்ணு; எங்களுக்குத் தெரியும்.'
அவன் எவ்வளவுக்கெவ்வளவு வேகப்பட்டானோ, போலீஸ்காரர்கள் அவ்வளவுக் கவ்வளவு நிதானப்பட்டார்கள். நேற்று முழுவதும் ஒரு விஐபிக்கு 'பாரா' போனதால், பட்டினி கிடக்கும் வயிறுகளை, ரொட்டிகளாலும், மசால் வடைகளாலும் நிரப்பி விட்டு, இளங்கோவை அர்த்தத்தோடு பார்த்தார்கள். அவன் பைக்குள் இருந்ததை தேனீர் கடைக்காரரின் கைக்குள் வைத்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாய் பார்த்தபோது, ஒரு போலீஸ்காரர் அந்த இரும்புக் கடையை நோக்கி நின்ற ஆட்டோவில் துணி கட்டப்பட்ட மீட்டரை துகிலுரிந்து கொண்டிருந்த டிரைவருக்கு ஆணையிட்டார்:
"இந்தாப்பா... வண்டிய திருப்பு.''
இளங்கோ, பதறியடித்துச் சொன்னான் :
“சார்... சார்... அந்த இரும்புக் கடையில் போய்...”