Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 19 - சாவி
ஊர் ஓரத்து தென்னக் தோப்பில் மஞ்சு ‘கவாத்து’ பழகிக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கே போய் நின்றான்.
"உனக்கெப்படி தெரிந்த து இந்த இடம். யார் சொன்னாங்க?" என்று கேட்டாள் மஞ்சு.
"உங்க அப்பாதான் சொன்னார்?" என்றான் மூர்த்தி.
"அந்த சர்க்கஸ் ஆள் உன்னை ‘குத்தப் போறேன், வெட்டப் போறேன்’னு சொல்லிட்டிருக்கானே!"
"யார் அந்த கேரளாக்காரனா? அவனுக்கு என் மேல என்ன கோபம்?"
"பொறாமைதான்; நீ என்னோட அன்பாப் பேசறது, பழகறது, என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி நடந்துக்கறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கலே!"
”ஏன்?”
"என்னைக் கட்டிக்கற உரிமை அவனுக்குத்தான் இருக்காம். அவனும் எங்களைப் போல குஜராத்லேந்து வந்தவனாம்!"
"அட நீ குஜராத்திப் பெண்ணா! சொல்லவே இல்லையே!"
"நாங்க மொத்தம் அஞ்சு குடும்பம், ரெண்டு தலைமுறைக்கு முன்னால தஞ்சாவூர்லதான் குடியேறினோம். கழைக்கூத்துதான் எங்க தொழில், உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம்.“
"அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிநேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?"ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான் !"
”சரி; நீ என்ன செய்யப் போறே?"