கருத்துக் கதைகள் – 41. ஊடலும், கூடலும் காதலுக்கழகு... - தங்கமணி சுவாமினாதன்
நேற்றைய தொடர்ச்சி....
வெட்டியதால் சாகவில்லை--வெட்டாவிட்டால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை--சாகாவிட்டால் செத்திருப்பேன்.
வந்ததால் வரவில்லை--வராவிட்டால் வந்திருப்பேன்.
தன் காதலி தான் வராமல் இருந்ததற்கான காரணத்தை விடுகதை மூலம் சொன்னதைப் புரிந்துகொண்ட காதலன் அவ்விடுகதையின் அர்த்தம் புரியாத தன் நண்பனுக்கு அவ்வர்த்தத்தை எடுத்துக் கூறினான்.
நண்பா...என் காதலி அவள் சொன்னபடிநேற்று என்னைக் காணவே வந்திருக்கிறாள்.சில சமயம் அவள் குறுக்குப் பாதை வழியாக வருவதுண்டு.அவ்வழியில் தரையோடு தரையாக கிணறு ஒன்று உள்ளதாக என்னிடம் கூறியுள்ளாள்.
நேற்று அவ்வழியாகத்தான் வந்துள்ளாள் போலும்.அப்படி அவ்வழியாக வருகையில் இடியோடு கூடிய மழை பெய்துள்ளது.நடந்து வருபோது அடுத்த அடி வைக்க காலை வைக்கும் போது மின்னல் வெட்டியதாம்.
அம்மின்னல் வெளிச்ச்த்தில் தரையொடு தரையாக இருந்த கிணறு தெரிந்ததாம்.அப்படி மின்னல் வெட்டாதிருந்தால் அடுத்த அடியை கிணற்றில்தான் வைத்திருப்பாளாம்.கிணற்றில் விழுந்து செத்திருப்பாளாம்.
அதனால்தான் (மின்னல்) வெட்டியதால் சாகவில்லை--வெட்டா விட்டால் செத்திருப்பேன் என்றாள்.
மின்னல் வெளிச்சத்தில் கிணற்றில் விழாமல் தப்பிய நான் சட்டென காலை வேறிடத்தில் வைத்தேன்.
அப்படி வைத்தபோது காலில் ஏதோ வழுவழுத்தது.மீண்டும் மின்னல் வெட்டியது.அம்மின்னல் வெளிச்சத்தில் குனிந்து பார்த்தபோது மிதித்தது பாம்பை என்று தெரிந்தது.நல்ல வேளை அது செத்த பாம்பு.
(பாம்பு)செத்ததால் நான் சாகவில்லை--அது சாகாமல் இருந்தால் அது கடித்து நான் செத்திருப்பேன் என்று சொல்ல..
செத்ததால் சாகவில்லை---சாகாதிருந்தால் செத்திருப்பேன் என்றாள்.
நல்லவேளை என நினைத்து மேலே நடக்கையில் மீண்டும் ஒரு மின்னல் வெட்டியது.அம்மின்னல் வெளிச்சத்தில் தூரத்தில் வெளியூர் சென்றிருந்த என் தந்தை வருவது தெரியவே நான் பயந்து போய் வீடு திரும்பிவிட்டேன்.
அப்படி என் தந்தை மட்டும் வராதிருந்தால் கட்டாயம் சந்திக்க வந்திருப்பேன் என்று சொல்ல...
(தந்தை) வந்ததால் வரவில்லை--வராதிருந்தால் வந்திருப்பேன் என்றாள்...என்று விளக்கமாக எடுத்துக் கூறினான்.
மறு நாள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்தித்தபோது அவள் மீது கோபம் கொண்டதற்கு sorry கேட்டான் சர்வேஷ்.அப்புறம் என்ன..?..........இதயங்கள் இரண்டும் ஐஸ்க்ரீமாய் உருகின....
கதை சொல்லும் கருத்து:
காதலில் ஊடலும் கூடலும் இன்பம் என்பர்...(அனுபவம் கண்டவர்).....
குறிப்பு:-விடுகதை எங்கோ படித்தது...இக்கதைக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவறாக எண்ண வேண்டாம்.விடுகதை தந்தவருக்கு நன்றி.....