(Reading time: 4 - 8 minutes)

முற்புறமாக வந்து தன்னிரு கைகளையும் அவள் இடை முதல் கன்னம் வரை தொடாமல் ஓட்டிச்சென்றான்.நெளிந்தாள்.பெருமூச்சு வெளியேற்றினாள்.

புன்னகைத்தான்.உடைந்தாள்.

அவள் இதழ் வரை தன் இதழ் கொண்டுசென்று காற்றில் முத்தமிட்டான்.

அவள் கால்விரல்கள் சுருங்க கைமூடி கண்மூடி காற்றுமுத்தம் ஏற்றுக்கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கண்திறந்த அவள் தன் காதல் மலர்த்திய வெற்றியின் காதல் புன்னகை கண்டாள்.கன்னம் சிவந்தது.

“போதும் போங்கள்.எனக்கு உங்கள் மீது காதல் இல்லை”

எட்டடி தள்ளி முகம் திருப்பி நின்றாள்.

“பத்து நிமிடம் முடியவில்லை கண்மணி”

குறும்பாய் சிரித்தான்.அவள் மேலும் சிவந்தாள்.

“இந்த நெருக்கத்தின் அவஸ்தைகள் உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் மட்டுமே அரும்பும் கண்மணி…இது தான் காதல்”

அவள் கன்றுககுட்டியாய் ஓடிவந்து அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.

வந்தவளை விடக்கூடாதென தன் இதயத்தில் இறக்கிப்பூட்ட எண்ணி இன்னமும் இறுக்கியனைத்தான்.

“எனக்கு உங்கள் மீது காதல் இல்லை”

“தெரியும் காதலி”

காதல் புன்னகை பூத்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.