செத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பு பாக்கறியா டிஸ்சார்ஜ் ஆனதும் உன்னை டைவோர்ஸ் பண்ண போறேன் உன்னால எனக்கு தொல்லை" என சொல்லி விட்டு வெளியேறினான்.
"ஏன் என்னை பிழைக்க வைத்தாய் இறைவா " கண்ணீர் மல்க அழுதாள். அப்பொது தான் செவிலையார் ராதா அறைக்குள் வந்தாள் " என்னமா அழுகிற நல்ல வேளை கடவுள் புண்ணியத்துல
பொழச்ச நீ உன் வீட்டுக்கார் கரெக்ட் கொண்டு வந்து ஹாஸ்பிடல் ல சேத்து விட்ரு இல்ல அவ்வளவு தான்" என்றாள்.
மஞ்சுளா இருந்த மனோநிலையில் தாங்க முடியாமல் முருகனை பற்றி சொல்லி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன ராதா "எல்லாத்துக்கும் வழி பிறக்கும் கவலை படாத".
ஈராண்டு, மூன்று நாட்கள் சென்றதும் மஞ்சுளாவை டிஸ்சார்ஜ் செய்தாரகள். வீட்டுக்கு வந்தும் முருகன் மஞ்சுளாவின் தாயாரை வர சொல்லி அவளை கூட்டிசெல்ல சொன்னேன். மனத்தை தயார் படுத்தி மஞ்சுளா பேச தொடங்கினாள் " நான் போறாங்க உங்களக்கு நிம்மதி கொடுக்க முடிவு பண்ணிட்டேன் அது மட்டும் இல்லை நான் தாய்யாக போறேன் உங்கள இல்ல என்றாள் கட்டமாக. ஹாஸ்பிடல்ல நர்ஸ் ராதா ஒரு குழந்தை இல்ல பணக்கார தம்பதியார் வாடகை தாய் தேடுவதா சொன்னாங்க நான் அது சம்மதம் சொல்லிட்டேன் இனி நீங்க என்னை வெளிய அனுப்ப வேண்டாம் அவங்க வந்து என்னை இப்போ கூட்டி போவாங்க. எந்த குழந்தைக்காக என்னை வேண்டாம்னு சொன்னிங்களோ அத குழந்தைக்காக அந்த பணக்காரங்க என்னை நல்ல பார்த்துக்க போறாங்க நான் இதை பணத்துக்காக செய்யலை இனி குழந்தை இல்லை என்று ஏக்கம் எனக்கு வாராது எப்பவும். டெலிவரி முடித்து என்னை அவங்க அனாதை ஆசிரமம் அட்மினிஸ்டர் பண்ணற வேலை தருவதாக சொல்லி இருக்காங்க இனி அங்க இருக்கற எல்லா குழந்தைகளும் என் குழந்தைகள் தான். என் உலகம் நீங்க தான் வாழ்தேன் ஆனா நீங்க எனக்கு வேற உலகத்தை காட்டிஇருக்கீங்க ரொம்ப நன்றி " என சொல்லி விட்டு முருகனின் இருண்ட முகத்தை பொருட்டு படுத்தாது வெளியேறினாள்।
தெளிந்த வானம் அவளை வரவேற்க தயார் ஆனது!!!।