(Reading time: 5 - 9 minutes)

மனிதன்: ம்ம்ம்... ஆனால் பெஸ்ட்டா எதுவும் நடக்கலயே

கடவுள்: என்றைக்காவது சாப்பாட்டுக்கு டிரஸ்க்கு குறை இருந்ததா, உன்னோட கொஞ்ச வருமானத்தில கூட உனக்கு வேண்டியது எல்லாம் வேண்டிய நேரம் கிடைச்சிதா இல்லியா மகனே.

மனிதன்: ஆமாம், எனக்கு கூட பல சமயம் ஆச்சரியமா இருந்தது. ஆனால்...

கடவுள்: என்னப்பா ஆனால்... அதையும் கேட்டிடு..

மனிதன்: நான் உயிருக்கு உயிரா நினைச்ச என் கேர்ள் ப்ரண்டு என்னை விட்டு விட்டு போய்ட்டாளே...

கடவுள்: உன் உயிர் நான் கொடுத்தது தான அதான் எடுத்துட்டேன்..ஹாஹாஹா

மனிதன்: சிரிக்காம காரணம் சொல்லுங்க.

கடவுள்: உன்னோட எதிர் காலத்துல உன்னை தாங்குகிற ஆதரவாளரா இல்லாம உன்னை வேதனைப்படுத்துறவளா மாறி போய்டுவா அதான் அவளை இப்பவே கட் பண்ணிட்டேன்.

மனிதன்: ம்ம்ம்

கடவுள்: வேற எதாவது

மனிதன்: இல்ல எல்லாம் எனக்கு இப்போ தான் புரியுது.

கடவுள்: சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா.

மனிதன்: கேளுங்க

கடவுள்: நான் உன்னை எதுக்காக படைத்தேன்.

மனிதன்: தெரியலயே கடவுளே

கடவுள்: சரி விடு, இப்போ உன்னை தேடி நான் ஏன் வரணும்.

மனிதன்: அதுவும் தெரியலயே சாமி. நீங்களே சொல்லிடுங்க.

கடவுள்: நீங்க என்கிட்ட அன்பா பாசமா இருக்கனும் என்று தான் உங்களை படைத்தேன்.

மனிதன்: புரியலையே.

கடவுள்: அண்ட சராசங்களையும் படைத்து என் கட்டுப்பாட்டில வைத்திருக்கிறேன். மனிதனையும் தான்

மனிதன்: தெரியும் கடவுளே

கடவுள்: என்னுடைய படைப்புகள் எதுக்கிட்டேயுன் எதிர்பார்க்காத ஒன்றை மனிதர்கிட்ட எதிர் பார்க்கிறேன். அது என்னனு தெரியுமா?

மனிதன்: தெரியலையே

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.