பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிலே பெருவாரியானவர்கள்மீது, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன!
" என்ன பேச்சுமூச்சை காணோம்? பணம்னு சொன்னவுடனே, ஜகாவாங்கறீங்களா? இப்ப புரியுதா, காசில்லாதவனுக்கு பரிதாபம், மனிதாபிமானம், கருணையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு! நடையை கட்டுங்க!"
ரஞ்சனி என்னைப் பார்த்தாள்.
" சரி, பணத்தை தந்துவிட்டு, சிறுவனை அழைத்துப் போகிறோம், உங்ககிட்ட கடன் வாங்கின அவன் அப்பா, அம்மா விடுதலை ஆவாங்களா, உடனே?"
" நீங்க வந்தது, கேட்டது எல்லாம் இந்தச் சிறுவனுக்காக!இப்பவனைப் பெற்றவங்கமீது ஏன் திடீர் அக்கறை?"
" இத பாருங்க! நியாயமா பேசுங்க! ரெண்டு லட்ச ரூபாய் பணத்துக்காகத்தானே, அவங்களை சிறைக்கு அனுப்பினீங்க, அந்தப் பணம் நாங்க கொடுத்தால், அவங்களை விடுதலை செய்யவேண்டியதுதானே?"
" அது என் கையிலே இல்லை! போலீஸிலே கேளுங்க!"
" நீங்களும் கூடவந்து உங்களுக்கு பணம் கிடைத்ததை எழுத்துமூலமா போலீஸிடம் தரீங்களா?"
" அவங்களை சிறையிலே தள்ளின குற்றத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லே......."
" பின்னே எப்படி......?"
" ஒண்ணுமே தெரியாதமாதிரி நடிக்காதீங்க! பணம் பாதாளம் வரையிலும் பாயும்!