(Reading time: 8 - 16 minutes)

நிரபராதிகளை குண்டர்கள் சட்டத்திலே சிறையிலே வருஷக்கணக்கா அடைச்சு வைக்கலையா? அப்பாவிகளை கிரிமினல் வழக்குகளிலே மாட்டி சிறையில் தள்ளி, பத்து பதினைந்து வருஷங்கள் கேஸ் இழுத்துக் கொண்டுபோவதெல்லாம் தெரியாத பச்சைக் குழந்தையா நீங்க?

 

 சரி சரி, உங்களிடம் பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணமுடியாது. முடிவா சொல்றேன், இந்தப் பையனை என்னிடமிருந்து அழைத்துப் போகணும்னா, ரெண்டு லட்ச ரூபாயை கீழே வைங்க! இல்லேன்னா கிளம்புங்க!"

 

 ரஞ்சனி பேசினாள்.

 

 "நீங்க சொல்வதை எப்படி நம்பறது? ரெண்டு லட்ச ரூபாய் அவங்களுக்கு கொடுத்ததுக்கு, பத்திரம் எழுதி வாங்கியிருப்பீங்களே, அதையாவது எடுத்து வந்து காட்டுங்க! மற்றதை விட்டு, பணத்தை கொடுத்து பையனை அழைத்துப் போகிறோம்........"

 

 "இறுதியா சொல்றேன், கிளம்புங்க! இல்லேன்னா, வீட்டிலே தனியா இருக்கிற பொம்பளைகிட்ட தப்பா நடந்துக்கிறீங்கன்னு போலீஸுக்கு போன் போட்டு உங்களை உள்ளே தள்ளச் சொல்லட்டுமா? நான் சொன்னபடி போலீஸ் செய்வாங்கன்னு புரிஞ்சிருக்குமே!"

 

 ரஞ்சனி எழுந்தாள், நானும்தான்!

 

 அப்போது, உள்ளே ஒளிந்து நின்று, முகத்தை மட்டும் காட்டினான், சிறுவன்!

 

அழாத குறை! சோகம் சொட்டவில்லை, கொட்டியது!

 

 கையாலாகாத இந்திய குடிமகனாக மனைவியுடன் வீடு திரும்பினேன்!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.