கம்பனியை சுற்றி போலீஸ் நின்றிருந்தது. ஒரே பரபரப்பாக இருந்தது. தரமற்ற பொருட்களை தயாரித்ததற்காக கம்பனி சீல் வைக்கப்பட்டது. காலவரையறையின்றி மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டது. சோர்ந்த முகத்துடன் எல்லோரும் வீடு திரும்பினார். அதுவும் ஷோபனாவுக்கு அழுகையே வந்துவிட்டது. “உனக்கு என்னம்மா, வேலை போனாலும் ப்ரச்சனை இல்லை . எங்களைப்பார் , ஒரே இடத்துல ஜாலியா வேலைக்கு வந்தோம் . இப்போ ரெண்டுபேரும் ஒண்ணாவே வேலை தேடி அலையணும் போல இருக்கே”. என்று புலம்பியபடி விடை பெற்றாள் அவள்.
வேறு வேலை கிடைக்கும் வரை என்ன செய்வது என்று எல்லோரும் புலம்பியபடி செல்லும்போது யாமினி மட்டும் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தாள். அவளுக்கு இந்த வேலையே போனாலும் வேறு வேலை தேடும் வரை கணவனின் வருமானம்தான் இருக்கிறதே.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்யாதது எவ்வளோ நல்லதாய் போயிற்று.
இந்நேரம் தன் யோசனையைக் கேட்டு அவனும் இங்கேயே வேலைக்கு சேந்திருந்தால் அவனுக்கும் அல்லவா வேலை போயிருக்கும். இருவரும் நடுத் தெருவில் நிற்க வேண்டியிருக்கும். தன் பிடிவாதத்தை ஏற்க மறுத்த கணவனின் முன்யோசனையை நினைத்து வியந்தபடி அவனிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி வீடு நோக்கி நடந்தாள் யாமினி.