சிறுகதை - நம்ப முடியலே! - ரவை
முருகன் ஓட்டல் முதலாளி காங்கேயன், எப்போதும் பூஜையறையிலே இருப்பார். படங்களுக்கு பூமாலை போட்டு அழகு பார்ப்பார்! நிறைய பூக்களை போட்டு பூஜை செய்வார்.
அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்!
முருகன் ஓட்டல் கிளைகள், நாடு முழுவதும் உள்ளதோடு, கடல் கடந்தும் தமிழர்வாழ் நாடுகளில்கூட உள்ளன.
கனடாவில் டொரோன்டோவில் உள்ள ஓட்டலுக்கு, கனடாவாழ் தமிழர்கள், இந்தியர்களைத் தவிர, கனடா நாட்டைச் சேர்ந்தவர்களும், இலங்கைத் தமிழர்களும்கூட வருவர்!
அதேபோல, அமெரிக்காவில், சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், டல்லஸ், ஹ்யூஸ்டன், கலிபோர்னியா, ஃப்ளோரிடா, கரோலினா, எல்லா இடங்களிலும் உண்டு.
துபாயிலும்,அபுதாபியிலும், லண்டனிலும், கொழும்புவிலும் கூட உண்டு!
முதலாளி காங்கேயனை கேளுங்கள், " ஐயா! உங்க ஓட்டல்கள் எங்கெங்கெல்லாம் உள்ளன?" "என் அப்பன் முருகனுக்கே தெரியும்! அவன் போட்ட பிச்சை! எனது பதினைந்தாம் வயதில், நான் வேறு ஒரு ஓட்டலில், கிளீனராக வேலை செய்து என் வாழ்வை துவங்கினேன், படிப்பறிவில்லை!
என் அப்பன் முருகன், என்னை தன் பூஜையறையில் உட்கார்த்திவிட்டு, பாவம்! அவன்தான் ஓடி ஓடி வேலை செய்து, உலகமெலாம் ஓட்டலை பரவச் செய்து புகழையும் தந்திருக்கிறான்.
அது பெரிதல்ல, இந்த வளர்ச்சிக்கு காரணமான ஊழியர் பட்டாளத்தையே உருவாக்கித் தந்துள்ளான்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் அப்பன் முருகன் ஓட்டல் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, என்னென்னவோ படிப்பு பட்டம் பெற்றவங்களை அனுப்பியிருக்கிறான்.
எனக்கே அந்த ஆங்கில சொற்கள் இப்போதுதான் தெரியும்.
ஆடிடர், மார்க்கெடிங் மானேஜர், சி.ஈ.ஓ., சி.எஃப்.ஓ., டைரக்டர், சேர்மன், .....எவ்வளவோ!
எனக்கு எத்தனை வங்கிகளில் பணம் உள்ளது என எனக்கு தெரியாது. அகௌண்டண்ட்டுக்குத்தான் தெரியும்!
எங்கெங்கே பங்களாக்கள், தோட்டங்கள், ஃபார்ம் ஹவுஸ்கள், உள்ளன என்னும் விவரங்கள், எத்தனை கார்கள், டிரக்குகள், பஸ்கள்,....... சி.ஈ.ஓ. சொல்வார்!
இத்தனை விவரங்களையும் ஏன் அடுக்குகிறேன் என்றால், இன்று கொரோனா தொற்று பாதிப்பினால், முருகன் ஓட்டல் முதலாளி காங்கேயன் இன்று உலகம் முழுவதும் கடனாளி!
ஆச்சரியமாயிருக்கா? நாற்பத்தைந்து நாட்களாக, ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன!
ஒரு நாளைக்கு மொத்தமாக வந்த நூறு கோடி வருமானம், நாற்பத்தைந்து நாட்களாக