ரூவா, ரெண்டு ரூவாயை மதிக்கறதில்லே, அதனாலே அந்த சில்லறைப் பணத்தை என்னிடம் வீசிடுவாங்க! ஒரு நாளைக்கு வர கலெக்ஷன்லே, பாதிகூட செலவழிக்கமாட்டேன்! மிச்சத்தை பத்திரப்படுத்தி பேங்க்லே போட்டு வச்சு சேர்த்த பணம்!"
" வாவ்! அதை வைச்சு தொழில் செய்யாம ஏன் பிச்சை எடுக்கிறே?"
" ஐயா! இதுவும் தொழில்தான்! நஷ்டமே வராத தொழில்! கஷ்டமில்லா தொழில்! நான் தொடர்ந்து இந்த தொழில் செய்யறேன், என் லட்ச ரூவாயை உனக்கு தரேன், நீ பிழைச்சுக்க!"
தனகோடி, முத்துவின் காலில் விழுந்தார். " எந்திரு! பெரீசா நான் என்ன பண்ணிட்டேன்னு என் கால்ல விளுவுறே? நீங்கல்லாம் அன்னாடம் ஒண்ணு ரெண்டா கொடுத்ததை தானே திருப்பித் தரேன்!
ஐயா! ரோசனை செய்! இந்தப் பணம் பேங்கிலே இப்ப இருக்கு, எனக்கு அதுனால என்ன லாபம்?
நீயாவது பிழைச்சு போயேன்,........ஐயா! நாம எல்லாருமே வெறுங்கையோடத்தானே வந்தோம், வெறுங்கையோடத்தானே போகப்போறோம்......மேலே இருக்கறவன், ஒவ்வொருத்தர் கிட்ட இந்தப் பணத்தை சில சில நாள் கொடுத்து வச்சிட்டு பிறகு அதை எடுத்து வேற ஒருத்தருக்கு தராரு!
நீகூட, இந்தப் பணத்துக்கு ரொம்ப பெரிய மதிப்பு தராதே! ஏன்னா, அது திடீர்னு உன்னைவிட்டு போற போது, மனசுக்கு கஷ்டமாக இருக்கும்!
நான், ஏன் சேர்த்து வைச்சேன்னு கேட்கிறியா? என் வயத்துப் பசியைப் போக்க, துண்றேன், அதிகமா துண்ணமுடியுமா? வயத்துவலி வந்துடும், வேற ஏதாவது அந்தப் பணத்திலே வாங்கறேன்னு வச்சிக்க, அப்ப என்னாவும்? என் தேவை அதிகமாயிடும், கெடக்கற காசு, ஒருநாள் வரும், மறு நாள் வராது, தேவையை கூட்டிக்கிட்டா, வராத நாள்ல கஷ்டந்தானே! அதனால தான், அதிகமா வந்த பணம் அத்தனையும் பேங்க்ல போட்டு வச்சேன், இப்ப பாரு! ஒனக்கு ஒதவுது!
ஒனக்கு என்னெ மாதிரி பொழக்க தெரியாது! வேற மாதிரி வளந்துட்டே!
வா, என்னோட! பேங்க் போய் பணம் எடுத்து தரேன்!"