இல்லாமல் எளிமையா கல்யாணம் நடந்தது.அம்மாவுக்கு சந்தோஷமா இருந்துது.என் கல்யாணம் முடிஞ்சதும் அம்மாவுக்கு உடம்பு இன்னும் பலவீனமாச்சு நான் கல்யாணம் ஆன நாள் முதலா அம்மாவை கூடவே இருந்து கவனிச்சுகிட்டேன்.அப்போலாம் என்ன புரிஞ்ச நல்ல துணை கிடைத்திருக்கிறது நினைத்தேன்.
ஒரு வாரத்தில் எங்க அம்மா என்ன விட்டு போய்ட்டாங்க.அதுக்கு பிறகு நானும் என் கணவரும் அவரோட சொந்தஊரான சிவகுடிக்கு போய்ட்டோம்.
அவருக்கு சொந்தம்னு சொல்ல ஒரு வயசான தாத்தா மட்டும்தான் இருந்தார்.ஆனால் அங்கே போன அன்றே அவரை பற்றியும் அவரது உண்மையான முகத்தை பற்றியும் சாயம் வெளுக்க தொடங்கியது.
எப்போவும் குடித்தான் வேலைக்கு போகாமல் வீட்டிலே இருந்தார்.அதோடு சேர்த்து வீட்டில் எப்போதும் சண்டை.ஆதரவு இல்லாமல் இருந்த எனக்கு அவர்தான் எல்லாம்னு நினைச்ச நினைப்பு பொய்யானது.அம்மா இறந்த துக்கம் என்மனசில் ஆறாமல் இருந்தது அதோடு இந்த ஏமாற்றம் ரெண்டும் நான் தனிமையில் அடைந்துகொண்டேன்.
நான் கூலிவேலைக்கு போக ஆரம்பிச்சேன்.ஆனால் அவரோட ஆசைக்கும் ஆடம்பரத்துக்கும் என்னோட சம்பளம் போதவில்லை.சவகாச தோஷம் அவர் மிருகமா மாறினார்.பணம் சம்பாதிக்க என்னை பயன்படுத்த நெனைச்சான்.என் உடம்பை கூறுபோட துணிஞ்சான்.இந்த விஷயம் எனக்கு தெரியாது.
அவனோட உறவுக்காரர் ஒருத்தர் இறந்துட்டதா சொல்லி சீலம் பக்கத்துல ஒரு ஊருக்கு போகணும் சொன்னார்.அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது அவன் என்னை விலைக்கு வித்துட்டான்.
நம்பி கைபுடிச்சவள வேசியா போற குழில தள்ளிட்டு போய்ட்டான்.அந்த கும்பல் ரெண்டுநாள் என்னை மயகத்துலே வச்சிருந்தாங்க.இத ஒரு பெரிய அளவுல செய்ற கூட்டம் சார் அது.
நான் மயக்கமா இருக்குறதா அவங்க நினைத்துஅவங்க பேசிக்கிறதுல இருந்து எனக்கு தெரிஞ்சுது இந்தியா முழுவதும் அப்பாவி பெண்களை கடத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்துவது வெளிநாட்டுக்கு பொண்ணுங்களை கடத்தி விக்கிறது இவனுங்களோட தொழில்.
என்னோட சேர்த்து இன்னும் ரெண்டு பொண்ணுங்களை வேற ஒரு இடத்துக்கு மாத்தும்போதுதான் சார் ஒரு இடத்துல வண்டி பழுதாகி நிக்கும்போது தப்பி காட்டுக்குள்ளே வந்தேன்.ஆனால் அந்த வெறிநாய்கள் என்னை துரத்தி வந்தாங்க எப்படியோ போராடி இந்த காட்டுக்குள்ள ஓடிவந்துட்டேன்.
சின்ன வயசுல பாதுகாக்க வேண்டிய அப்பா எங்கள விட்டுட்டு ஓடிட்டார்.வாழ்க்கை முழுவதும் ஆணிவேராக இருக்க வேண்டிய கணவனும் என்னை பணத்துக்காக வேறொருத்தன் கிட்ட