கறுப்பில்லே, சிவாவைப்போல சிவந்தநிறம்.
எங்களுக்கு தெரிந்த ஒருவர் மூலமா உங்க மகன் ராமனைப்பற்றி தெரிந்தது.
அந்தப் பெயர் காதில் விழுந்ததுமே, மனசிலே மணி அடித்தது, இது பொருத்தமா இருக்கும்னு!
அதான், ஜாதகங்கள் பொருத்தம் பார்க்கலாம்னு சீதாவின் ஜாதகத்தை கொண்டு வந்தோம், இந்தா, ராதா! சாமியறையிலே வை!"
" ராதா! அப்படியே நம்ம ராமன் ஜாதகத்தை கொண்டு வா!"
" சிவா! இப்ப நான், என் மகனைப்பற்றின விவரங்கள் சொல்றேன், டாக்டரேட்! வயசு இருபத்தெட்டு! அவன் போட்டோ இதோ!......"
" மறந்தே போச்சே, நானும் சீதாவின் போட்டோ கொண்டு வந்திருக்கேன், இதோ!"
" ராமன், நியூயார்க்கில் மூணு வருஷமா வேலையிலே இருக்கான், ஒரு கம்பெனி டைரக்டரா இருக்கான், த்ரீ லேக்ஸ் டாலர் வருஷ சம்பளம்!
இப்பத்தான், தகுந்த வரனா பாருன்னு சொல்லி க்ரீன் சிக்னல் காட்டினான். கரெக்டா, அந்த நேரத்துக்கு நீங்க வந்திருக்கீங்க...கூடி வருது, வேளை!"
" கண்ணன்! உன் மகன் போட்டோவிலே பார்க்க ஜோராயிருக்கான், சீதாவுக்குப் பிடிக்கும்...."
" பாரு! உங்க சீதாவும் அழகா இருக்கா, போட்டோ விலே!......"
" சீக்கிரமே 'உங்க' போய், 'நம்ம'சீதாவாகணும்!"
" ஆகிவிடுவா...அவள் ஜாதகத்தை சாமியறையிலே வைச்சப்ப, அதன்மேலே பூ விழுந்தது, தெய்வத்தின் சம்மதம் கிடைச்சுடுத்து, இனி ஜோசியன் வாக்கு நல்லதா வரணும்....."
" எல்லாம் வரும்.... ராமன் எப்போ, இந்தியா வரப் போறான்?"
" பொருத்தமான பெண் கிடைத்ததும், வந்து பார்த்து விட்டு, உடனேயே கல்யாணம் பண்ணிண்டு அவளையும்கூட அழைச்சிண்டு திரும்பிடுவான் இதுதான் பிளான்...."
" எக்சலண்ட், கண்ணன்! சரி, நீங்க எப்போ எங்க வீட்டுக்கு வந்து பெண் பார்க்கப் போறீங்க?"
" சிவா! முதல்லே, நாம் ஜோசியனைப் பார்த்து, பேசி, பொருத்தம் பார்ப்போம்.. பிறகு, நாங்க, உன் வீட்டுக்கு வரோம்......சரியா?"
" அப்ப, நாங்க வரோம்!"
" இருங்க, ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்"
" ராதா! கல்யாணம் பேசற வீட்டிலே, அதுக்கு முன்பு, கை நனைக்கப்படாது என்று சொல்லுவாங்க......"
" அப்படின்னா சரி!"
" சிவா! ஆபீஸிலே நீ எனக்கு, 'சார்'தான்!"
நால்வரும் சிரித்தனர். சிவா-பார்வதி சென்றதும், கண்ணன் ராதாவை பார்த்து " என்ன