சிறுகதை - தெரியுமோ இது? - ரவை
வேறு யாருக்கு தெய்வம் தேவையோ, இல்லையோ, நிச்சயமாக சிறு வியாபாரிக்கு அவசியம் தேவை, தெய்வம்!
பெட்டிக் கடை பெரிய சாமி, நாள் முழுவதும், 'சாமி! நீ கண் திறந்தால்தான், என் பசி அடங்கும்! உனக்குத் தெரியும், எனக்கு பேராசை கிடையாது!
ஆனா, குறைந்தது, நூறு ரூவா தேவைப்படுதே, என் குடும்பத்துக்கு, நாள் ஒன்றுக்கு!
அதுக்கு நீ வழி செய், போதும்!
என் பெட்டிக் கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு, மிட்டாய், பிஸ்கெட் இவ்வளவுதான் விற்பனை!
ஏன்னா, என்னைப் போல, ஏழைங்கதான் என் கடைக்கு வராங்க! அவங்க அதிக பட்சம், அஞ்சு பத்து ரூவாதான் செலவு பண்ண முடியும்!
அந்த மாதிரி எத்தனைபேர் என் கடையில் ஒரு நாளைக்கு பொருள் வாங்கினால், எனக்கு நிகர லாபம் நூறு ரூவா தேறும்னு யோசித்துப் பாரு!
ஐநூறு ரூவாக்கு தினமும் வியாபாரம் நடந்தால்தான், தேவையான நூறு ரூவாயை பார்க்கமுடியும்!
அதுக்கு, நூறுபேர் என் கடைக்கு வந்து பொருள் வாங்கணும், சரியா?
இத்தனைநாள், இந்த தெருவிலே, நான் மட்டும் கடை வைச்சிருந்தேன், தப்பிச்சேன்.........
திடீர்னு, இன்னிக்கு என் கடைக்கு எதிரிலேயே இன்னொருத்தன் பெட்டிக் கடை போடறான், அவனை நான் போடாதேன்னு தடுக்க முடியுமா?
இப்ப என்ன செய்வது? அவன், என்ன தைரியத்திலே கடை போடறான்னு தெரிலே அவனையே கேட்கிறேனே!
" நீ, நம்ம முருகேசன் பையன், சிவன்தானே?"
" ஆமாங்க! படிப்பில்லே வேலை ஒண்ணும் கிடைக்கலே, கையிலே உள்ள காசிலே, கடை போட வந்திருக்கேன், உங்க தயவு வேணும்....."
" அடப்பாவி! எனக்குப் போட்டியா கடை போட்டு விட்டு, இப்ப தயவு வேணும்னு சொல்றே?"
" கடைதான் எதிரிலே இருக்கே தவிர, நான் உங்க எதிரி இல்லேங்க.....நம்புங்க, பல வருஷமா உங்க கடைலே வாடிக்கையா வாங்கறவங்க, எப்படி அதே பொருளை என் கடைலே வாங்குவாங்க?"
" அப்ப எதெ நம்பி கடை போடறே?"
"கடைத் தெருவிலே, நகைக்கடை, துணிக்கடை, பாத்திரக் கடை, பக்கத்துப் பக்கத்திலே இருந்தாலும், வியாபாரம் எல்லா கடையிலும் நடக்கிறமாதிரி, இந்த ஊரிலே உள்ள ஏழைங்க,