சிறுகதை - சுகம்! சுகம்! சுகம்! - ரவை
" குணவதி! உன் புருஷன் ஏன் சோகமா இருக்காரு, பிசினசு நல்லா ஓடுதில்லே?"
" அப்பா! அவர் ஒரு பைத்தியம், அவரை விடுங்க!"
" அப்படி விடமுடியாது, குணவதி! ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லணுமில்லே, சொல்லு, ஏன் அவரு.....?"
" இந்த வருஷத்து லாபம், முப்பது கோடி! இது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா இல்லே துக்கப்படற விஷயமா?"
" மை காட்! அப்படியா! பார்ட்டியே நடத்தி கொண்டாடற விஷயமாச்சே!"
" அவருக்கு என்ன சோகம்னா, இந்த லாபம், போன வருஷ லாபத்தைவிட குறைவாம், பத்து கோடி ரூவா,......என்ன சொல்றது, அவரை?"
குணவதியுடன் அவள் தந்தையும் மனமார சிரித்த போது, மாப்பிள்ளை வந்தார்.
"என்ன இங்கே சிரிப்பு? அவனவன் சோகத்திலே உள்ளபோது! போய் வேலையைப் பாருங்க.....!"
" மாப்ளே! உட்கார்ந்து பேசுவோமே.....சோகமா இருந்தா, எல்லாம் நேராகிடுமா? என்ன செய்ய வேண்டும்னு யோசிக்கணும், அதுக்கு மனமும் அறிவும் தெளிவா இருக்கணும், எப்ப தெளிவா இருக்கும்? மனம் சந்தோஷமா இருந்தால்தான், தெளிவா இருக்கும்......"
" மாமா! ஒவ்வொரு பைசா சம்பாதிக்கறதுக்கு, எத்தனை கஷ்டப்படணும், தெரியுமா? பத்து கோடி, குறைஞ்சிருக்கு, ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?"
" கொக்குக்கு ஒண்ணே மதின்னு சொல்வாங்க, அது ஒண்ணையே நினைத்து, சோகப்படாம, சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும், யோசிக்கணும்!
நடுவிலே, மூணுமாசம் இந்த தொற்று நோயிலே, எத்தனையோ பிசினசுகள் மூடிவிட்ட நிலையிலே, உங்க பிசினசு மட்டும் லாபம் தந்து இருக்கிறது, சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே?"
" அதுசரி, மாமா! ஆனா, கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கலேன்னா...."
அப்போது, அங்கே குணவதியின் மகன் மகேசன் வந்தான். குணவதியின் தந்தை அவனைக் கேட்டார். " மகேசா! எதுடா சுகம்?" " தாத்தா! தலைக்கு மேலே, ஃபேன் ஃபுல் ஸ்பீடிலே சுற்ற, தலையிலிருந்து கால் வரை போர்த்திண்டு படுத்துப் பாரு, அந்த சுகத்துக்கு ஈடு, இணையே கிடையாது."
" மாப்ளே! உங்களுக்கு சுகமா இருக்கணும் என்கிற ஆசையே இல்லையா? நான் குணவதியை தந்ததோடு, பத்து கோடி ரூவா சொத்தும் தந்திருக்கேன், ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணுங்க! பிசினசை உடனே யாருக்காவது விற்று பணமாக்கி வைச்சுக்குங்க!"
" சரி, மாமா! குணவதி! உங்கப்பா சொன்னதை நீயும் கேட்டியோனோ? சம்மதம் தானே?"