சிறுகதை - கன்னம் குழிந்தது! - ரவை
கல்லூரியில் படித்த காலம்! கருத்தரங்கம் ஒன்றில், சுவை நிறைந்த விவாதம்!
எது சிறந்தது? தாயன்பா? சேயன்பா? இரண்டு கட்சிகளும், நன்கு தயாரித்து, இலக்கியச் சுவை நிரம்ப, கருத்துக்களை முன் வைத்தனர்.
'தாயன்பே!' என்ற கட்சியின் தலைவி காமினி பேசும்போது, " தாய், சேயின்மீது காட்டும் அன்பே சிறந்தது!
சேய் கருவாக உருப் பெறும் முன்பிருந்தே, தாய் அந்தச் சேயைப்பற்றி கனவு காண்கிறாள்.
குழந்தையை பற்றிய சிந்தனையில் பசி மறக்கிறாள் வேறெந்த எண்ணமும் அவள் மனதில் பிறப்பதில்லை. சேய்! சேய்! சேய்! இதுவே அவள் மூச்சு, பேச்சு!
வயிற்றில் கரு உதித்ததும், துவங்கும், அவள் தன் வயிற்றைத் தடவும் இன்பம்! ஏதோ வளர்ந்த சேயுடன் பேசுவதாகவும், தொடுவதாகவும், அதன் சிரிப்பை கண்டு மகிழ்வதாகவும், நினைத்து நினைத்து களிப்புக்கடலில் மிதப்பாள்!
கருத்தரித்த பிறகோ, தாய்க்கு வேறெந்த நினைவும் இருக்காது. முதல் சில மாதம் குனிந்து குனிந்து வயிற்றைப் பார்ப்பாள். பிறகு,வயிறு, கொஞ்சம் உள்ளிருக்கும் கருவை காட்டிக் கொடுக்கத் துவங்கி யதும், கை அடிவயிற்றிலேயே இருக்கும், ஏதோ, கீழே விழவிருக்கும் கருவை அவள் தாங்கிப் பிடித்துக் கொள்வது போலிருக்கும்.
இரவு அவள் தூங்கவே மாட்டாள். புரண்டு புரண்டு படுப்பாள், ஏன் தெரியுமா? வலது பக்கத்திலிருந்து இடது பக்கமும், அதேபோல வலம் இருந்து இடமும் கரு நகரும் இயக்கத்தை ரசிப்பாள்!
அருகில் படுத்துத் தூங்கும் கணவனை எழுப்பி, தன் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வாள்.
கொஞ்சம் கரு வளர்ந்த நிலையில் உரு பெற்றதும், அந்த உரு தன் வயிற்றில் அதன் பிஞ்சுக்காலால், உதை தருவதை ஏற்று மகிழ்வாள்!
" இத பாருங்க! உங்க பிள்ளை என்னை காலாலே உதைக்கிறான்....." என்று தன் கணவனிடம் பொய்க் கோபம் காட்டுவாள்.
அவனும் அந்த ஓரங்க நாடகத்தில் பங்கு கொண்டு " ராஜா! நல்லா உதைடா! உன்னை என் பிள்ளை என்று ஒதுக்குகிறாள், ராட்சசி!" என தன் பங்குக்கு சொல்லி தாயின் இன்பத்தை நீரிட்டு வளர்ப்பான்!
" ஏங்க! உங்க ராஜா, ஒருவேளை ராணியா இருந்தா, வேண்டாமா?"
" ஆசை, தோசை, அப்பளம், வடை.....ராணியா இருந்தா இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு! ஏன் தெரியுமா? அவ உன்னைப்போல, அழகா இருப்பா..!"
இரவு முழுவதும் இப்படி வசனம் பேசியே கழித்துவிட்டு அவன் ஆபீஸில் போய் தூங்கி