(Reading time: 8 - 16 minutes)

சுரத்தில்லை என்று தெரிந்துவிட்டது!

தடுமாறி அமர்ந்தான், கணவன்!

 " வெரி சாரி! காமினி தாய் ஆகிற வாய்ப்பே இல்லை! இதுதான் சோதனைகள் தந்த விடை!

ஆனால், நான் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்! ஏன், தெரியுமா?

இவை யாவும் மனிதன் சக்திக்குள் நடத்தப்படுகிற சோதனைகள்!     'நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா!' என கண்ணதாசன் பாடியதுபோல தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்! நிச்சயம் அவன் நல்லது செய்வான்.

 என்ன இவ்வளவு உறுதி யாகச் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா, இதேபோல கைவிடப்பட்ட நிலையில் நான் இருந்தபோது சுவாமி சத்பவானந்தா சமயத்தில் தரிசனம் தந்து எனக்கு இதை உபதேசித்தார்!

இப்போது, நான் ஒன்று அல்ல இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்! காமினியை என் வீட்டுக்கு அழைத்து வாருங்கள், நானே அவளிடம் பேசுகிறேன்........."

  கணவன் அழாத குறையாக, டாக்டரின் அறை யிலிருந்து வெளிவந்தபோது, அவனை கைத்தாங்கலாக பிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அவனுடைய தந்தை காத்திருந்தார்.

மகனை தன்னுடன் காரில் அழைத்து வந்து, வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் தாயும் அங்கே விழிப் பெருக்குடன் நின்றிருந்தாள்.

 இறைவனை வேண்ட, காமினி அவனிடம் நேரிலே சென்றுவிட்டாள்!

தாயன்பின் எல்லை இதுதானோ?

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.