சிறுகதை - கானல் நீர் - தனு சஜ்ஜீ
மல்லிப்பூ...... முல்லப்பூ......... ஜாதிப் பூ........ எத எடுத்தாலும் பத்து வாங்கம்மா.... வாங்க.... பேருந்து நிலையத்தில் வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்க....
அவள் ஏற வேண்டிய பேருந்தும் வந்து விட்டது. தன் ஆறு வயது மகனுடன் அவளும் ஏறினால், இருக்கை அனைத்திலும் ஆட்கள் இருக்க, ஒரு பெண்ணின் அருகில் ஒரேயொரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அப்பாடா என்று தன் குழந்தையுடன் அந்த இருக்கையில் அமர்ந்து, அவள் திரும்பி அருகிலிருந்தவளை பார்த்து அதிர்ந்து போனால்.......
பதிலுக்கு அந்த பெண்ணும் அதிர.......
இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
முதலில் அவளே பேச்சை ஆரம்பித்தால்,
எப்புடி சுசி இருக்க???
இருக்கே கா. நீங்க??
நல்லா இருக்கே சுசி.
ம்ம்... அப்பொழுதுதான் அருகில் இருந்த குழந்தையை பார்த்தாள். பார்த்ததும் இன்னொரு அதிர்ச்சி.....
உங்கப் யைனாக்கா......
ம்ம் ..... ஆமா சுசி....
அப்புடியே அவுங்க அப்பா மாறியே இருக்கான்கா....... குரலில் ஏக்கம் இழையோடியதோ????
சின்ன சிரிப்புடன் உன் குழந்தைய கூட்டிட்டு வரலையா சுசி.