முதல் இரவு .... கண்ணீர் இரவாக கறைய...
அடுத்த நாள் அவன் கூறியதை மாமியாரிடம் கூற,
அவர் ஆம்பளங்க அப்புடிதா இருப்பாங்க போக போக எல்லாம் சரியா போய்ப்புடு சரியா......
நானும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்..
ஒரு வருடமும் ஆகி விட்டது அவரின் நிழல் கூட என்னை சீண்ட வில்லை. ஜடமாகி போனேன். அவரது குறிக்கோளில் அவர் சரியாக இருந்தார்.
அவருக்குதான் என்னை பிடிக்காது. ஆனால் எனக்கு அவர் தான் உயிராகி போனார் மனதளவில்......
இதோ மூன்று வருடமும் முடிந்துவிட்டது. என்னுடைய ஆசையை விட அவர் கனவாவது நிறைவேறட்டும் என்ற முடிவுடன் அவரை விட்டு விலக தயாராக இருந்தேன். ஆனால் ஒரு நிபந்தனை என்றேன்.
ஒரு நாள் மட்டும் என்னுடன் வாழ்ந்துவிடுங்கள். பிறகு எப்பொழுதும் உங்கள் முன் நான் வர மாட்டேன் என்றேன்.
அவரும் ஒப்புக்கொண்டார். அந்த ஒரு நாள் என் ஏக்கங்கள் அனைத்தும் தீர்ந்த ஒரு நாள் போதும் எனக்கு.
இனி யாருக்காக வாழ வேண்டும் என்று நினைக்கையில் துணையாக வந்தது என்னவரின் ஒரு நாள் பரிசு. எங்கள் இருவரின் உயிர் என் வயிற்றில்.......
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.....
திருப்பூர் பனியன் கம்பேனியில் வேலை தேடிக் கொண்டேன். எங்கள் இருவரின் வாழ்க்கை