" நான் இதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்றேன்......உடனே அப்பா சொன்னபடி செய்யுங்க!"
" மாமா! என் பிசினசை விற்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும், அதுவரையிலும் அதை நடத்தவா, நிறுத்தவா?"
" நிறுத்திட்டு, உங்க முழு கவனத்தையும் விற்கிறதிலே செலுத்தி பணம் பண்ணுங்க! சம்பாதித்தது போதும்.
மாப்ளே! எனக்கு ஒரே மகள் மாதிரி, உங்களுக்கு ஒரே மகன்! அவனுக்கும் இந்த சொத்து போதும்!
நீங்க செய்ய வேண்டியது, ஜாலியா குணவதியோட ஊரை சுற்றிக் கொண்டு, சுகத்தை ஜோரா அனுபவிங்க!"
குணவதியின் கணவன் சோமு கெட்டிக்காரன். தன் சாமர்த்தியத்தை வீணாக்க விரும்பாமல்தான், பிசினசு செய்தான்.
சம்பாதித்தான், இது போதுமே என்கிறார்கள், குணவதியும் மாமா முத்துவும்!
ஓ.கே. போதும்! இனி சுகத்தை அனுபவிப்போம்! என சோமு முடிவு எடுத்தான்!
" குணவதி! மகிழ்ச்சி தானே? இப்ப சொல்லு! என்ன செய்யலாம்? உங்கப்பா சொல்றாரு, சுகம் அனுபவியுங்கன்னு! அதுக்கு என்ன செய்யலாம்?"
" சுகத்தை அனுபவித்து லைஃபை ஜாலியா வாழ்வோம்!"
" அது சரி, சுகம் எது? உனக்கு ஒண்ணு சுகமாகவும் எனக்கு வேற ஒண்ணு சுகம் தருவதாகவும் இருக்கலாமே, அதனாலே உனக்கு எதுன்னு சொல்லு, அதை அனுபவித்து விட்டு பிறகு என் சுகத்தை தேடுவோம். லேடீஸ் ஃபர்ஸ்ட், சொல்லு!"
குணவதி, கணவனை நெருங்கி வந்து, "நாள்பூரா உங்களை கட்டிண்டு தூங்கி மறுநாள் காலையிலேதான் எழுந்திருக்கணும், இருவரும்!"
" ஓ.கே. இப்ப பாதிநாள் ஓடிப் போயிடுத்து, நாளைக்கு அதை வைச்சுப்போம்! இன்று மீதி அரைநாளிலே செய்ய வேண்டியதைச் சொல்லு!"
" ரெண்டு பேரும் வெளியே நடந்து போய், மக்கள் என்ன பண்றாங்கன்னு வேடிக்கை பார்ப்போம்! ஏன், எதுக்குன்னு மனசிலே கேள்வி இல்லாம, சும்மா திறந்த மனதோட, பார்க்கணும்..."
" கிளம்பு!" குணவதி, உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றாள்.
சோமு, மாமா முத்துவைப் பார்த்து பேசினார்.
" மாமா! நானும் உங்க மகளும் ஜாலியா ஊரை சுற்றி பார்க்கப் போறோம், நீங்க மகேசனை கவனிச்சுக்குங்க! எப்போ திரும்புவோம்னு, கூற முடியாது....அதனாலே நீங்க ரெண்டு பேரும்