அவன் திடுமென வந்த காரணம் தெரியாவிட்டாலும், ஏதோ நோக்கமுடன்தான் வந்திருக்கிறான் என்று ஊகம் செய்தனர்!
" வரதா! வருஷம் பத்து ஆயிடுத்துடா! இப்படியே ரெண்டு பேரும் மௌனமா இருந்தா எப்படிடா? அம்மா கவலைப்படறாடா!"
" எதுக்கு அண்ணா?"
" என்னடா, ஒண்ணும் தெரி யாத குழந்தைமாதிரி பேசி என் வாயை கிண்டறியா? விமலா! நீயாவது சொல்லு!"
" என்ன சொல்லணும், அண்ணா? எதைப்பற்றி பேச றீங்கன்னு புரியலியே....."
" போச்சுடா, ஜாடிக்கு ஏற்ற மூடியா, பொருத்தமா அமைஞ்சு இருக்கீங்க, ரெண்டு பேரும்! உங்களுக்கு ஒரு வாரிசு ஆணோ, பெண்ணோ, வேண்டாமா?"
" அண்ணா! எங்களுக்கு வாரிசா, எதுக்கு?"
" பிற்காலத்திலே உங்க ரெண்டு பேரைப் பற்றி பேச குழந்தைகள் வேண்டாமா?"
" அண்ணா! எங்களைப் பற்றிப் பேச, குழந்தைகள் தேவையா என்ன? நாங்க வாழற விதம் ஊரையே பேச வைக்கணுங்கறதுதான் எங்க ஆசை!"
" நீ ஒரு ஆசிரியர்! உன்னிடம் பேசி ஜெயிக்க முடியாது! நேரடியாவே கேட்கிறேன், நீங்க ரெண்டு பேரும் டாக்டரிடம் போய் பேசினீங்களா, பத்து வருஷம் ஆகியும், ஏன் இன்னும் குழந்தை பிறக்கலைன்னு...?"
" அவசியம்னு இதுவரை நினைக்கலே..."
" உங்களை டாக்டரிடம் அழைத்துப் போகத்தான் நான் வந்திருக்கேன், எனக்கு தெரிந்த ஒரு பிரபல ஜைனகாலஜிஸ்ட் இருக்கா, அவளிடம் எப்ப வரலாம்னு கேட்டுக் கொண்டு வரேன், போக நீங்க தயாரா இருங்க!"
" அண்ணா! உங்களுக்கு எங்கள்மீது உள்ள பாசத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்!
ஆனால், இதுவரையில், எங்களுக்கு குழந்தையில்லை என்ற குறையே தோன்றியது இல்லை, ஏன்னா, எங்கள் தேவையை அறிந்து பூர்த்தி செய்கிறார், கடவுள் என உறுதியாக நம்புகிறோம்.
குழந்தை எங்களுக்கு அவசியம் என்று எப்போது கடவுள் நினைக்கிறாரோ, அப்போது அவரே அதை தருவார்!
பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்கிறோம்! தவறாக நினைக்காதீர்கள்!
டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறோம்,......"
" நீ என்ன சொல்றே, விமலா?"
" அவர், எங்க ரெண்டு பேருடைய நம்பிக்கையை தான் சொல்கிறார், அண்ணா"