அண்ணி அண்ணி என்று மூச்சுக்கு முன்னூறு முறை அவளை பற்றி பேசும் இவனின் தங்கை, மருமகள் என்று மெய்சிலிர்த்து இவளின் அழகை தினம் ரசித்து பேசும் இவனின் தாய், அவர் குடும்பம் பற்றி மெச்சி பேசும் தந்தை ...பின் இவன் கற்பனையை குறை கூற முடியுமா ..?
நாட்கள் நகர்ந்தன பாரதியின் பழி வாங்கும் உணர்ச்சியும் குறையாது வளர்ந்தது ..பிரியாவின் காதலும் வளர்ந்தது ...
அன்று முகூர்த்த புடவை எடுக்க என அனைவரும் கடைக்கு வந்திருக்க இவள் புடவையை எடுத்தாள். கண்ணாடியில் அதை தன் மேல் போட்டு சற்று நேரம் நின்றாள்..பின் உதட்டை பிதுக்கி வேறு ஒரு புடவையை எடுத்து கொண்டு அங்கே நின்று அதே போல் செய்ய, கண்ணாடியில் தெரிந்த அவள் காதலன் நன்றாக உள்ளது என்ற செய்கையை செய்ய இவள் துள்ளி கொண்டு வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
்பெண் அவனுக்கு ஊட்டிவிட வேண்டும் அனைவரும் ஆர்பரிக்க இவளோ பயந்து ஒரு பிடி சோறு எடுத்து அவன் வாயருகே நீட்ட அவன் வாய் திறக்கவில்லை ...நிமிர்ந்து அவன் கண்களை காண அவன் முறைத்த பார்வையில் அரண்டு பிடி சோற்றையும் அவன் மேலே உதிர்த்து விட கொல்லென்று சிரித்து பிறர் கிண்டலடிக்க இவள் விழி நீரை கக்கியது ..