வாசனை - கிருத்திகா
இளம் காலை பனி முகத்தில் விழ ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்தாள் நீலா ,
எதோ சிந்தனையில் அமர்ந்து இருந்தவள் மூக்கில் நுழைந்த அந்த நாற்றத்தில் கவனம் கலைந்தாள் ..பஸ் அந்த நிறுத்தத்தில் நின்றதில் இவளின் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் அந்த மீன்காரி ..
நெற்றியில் காசளவு பொட்டு மஞ்சள் பூசிய முகம் பார்க்க மங்களகரமாக இருந்தாள் ஆனால் அந்த நாற்றம் நீலாவால் தாங்கமுடியவில்லை அது மட்டும் இல்லாமல் எங்கே இந்த மீன் நாற்றம் நம் மீது வந்துவிடுமோ என்ற பயமும் கூட பொருத்து பார்த்தாள் முடியவில்லை சரி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என நினைத்தாள்
சிறிது நேரத்தில் யோவ் கண்டகிட்டர் பஸ் எ நிறுத்துயா வண்டில வரமுடியுதா ??? இவளுக கண்ட கண்ட செண்ட போட்டுக்கிட்டு வந்திடுறாலுக நாத்தம் குடல புடுங்குது என்று சொல்லி பஸ் நின்ற உடன் வேகமாக எறங்கி சென்றாள்
பஸ் நகர்ந்தது அவள் புள்ளியாய் மறையும் வரை நீலாவின் பார்வை அகல வில்லை
{kunena_discuss:926}