குடிகாரன் - கிருத்திகா
எப்ப பாரு இந்த ஆளோட இதே தொல்ல குடிச்சிட்டு வந்து ரகளை பண்ணறது தெருவுல யாரும் தூங்க முடியறது இல்லை
இந்தால கடிட்டிகிட்டு நான் சுகபடவும் இல்லை .. நல்ல நாள் பொல்லா நாள் நு ஒன்னும் இல்லை என்று புலம்பி கொண்டு இருந்தாள் கண்ணம்மா
அவங்க குப்பத்துக்கு நல்லது பண்ண வந்த பாஸ்டர் இவ சொன்ன கதை கேட்டிடு உன் புருஷனை அனுபிவைமா நான் நல்லது சொல்லறேன்னு சொல்ல இவளும் அனுப்பினா
ஒரு வாரம் பத்துநாள் போக இவன் குடி கோரஞ்சமாதிரியும் இருந்துச்சி
ஒருநாள் ராத்திரி சொருதுன்னும் பொது " புள்ள நான் நியனச்தனம் எடுகபோறேன் அப்டினுசொன்ன ..சரி எந்த சாமினல்லும் நல்லது செஞ்ச போதும் நினைச்சி சரி நு சொன்ன கண்ணம்மா ..( மாமா திர்ந்திடுமேனு அவளுக்கு ஒரே சந்தோசம்
அந்த நாளும் வந்தது ...
குப்புசாமியை மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக்கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.
" உன்னுடைய பாவங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.இன்று நீ புதிதாக சுத்தமானவனாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ சாமுவேல் என்றழைக்கப்படுவாய்.
இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு சாமுவேலே ".
சத்யம். டீ குடிக்கலாமா பாஸ்ட்டர்.
தாராளமா எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்.
ஓகே பாஸ்ட்டர்.
சாமுவேலான குடிகார குப்புசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் ரம் எடுத்து தொட்டி நிறைய இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.
" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது.நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய்.இன்றுமுதல் நீ " டீ " என்றழைக்கப்படுவாய் "
பின்னாடியே வந்து அவன் பண்ணுறத பாத்த கண்ணம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டா
{kunena_discuss:926}