என்முன்னால் முன்னாள் காதலி - கிருஷ்ண பாபு
அவளை மீண்டும் சந்திப்பேன் என நிச்சயம் நான் நினைக்கவில்லை.
அவளும் அதிர்ச்சியாகவே இருந்தாள்.
நெருங்கி வந்து கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
விடையற்ற மௌனம் ஒன்று
எங்கள் காதல் நினைவுகளை
மீட்ட ஆரம்பித்தது.
மெல்லிய அவளது விரல்களின் ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்தேன்.
அவள் விரலில் இருந்த என் மோதிரமும்
என் விரலில் இருந்த அவள் மோதிரமும்
புன்னகைத்துக் கொண்டன.
ரகசியமாக முணுமுணுத்தாள்.
'ரேஸ்கல்'.
எனது செவி வழி பயணித்து
இதயத்தில் எதிரொலித்தது
அவளது செல்ல விளித்தலான
'ரேஸ்கல்'
அனைத்தும் கனவு போல இருந்தது.
உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலவில்லை.
ஆர்ப்பரிக்கும் மனதை அமைதிப்படுத்தும் யுத்தத்தில் இருந்தேன்.
என் மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
தற்செயலாக வீசிய காற்றில் அவளது கூந்தலின் சிறு கற்றை என் முகத்தை வருடியதும் எழுந்து அமர்ந்தேன்.
மறுநாள்.
ஊடகங்கள் அனைத்திலும் என் போட்டோவோடு செய்தி வந்தது.
'விபத்தில் ஆறுமாதம் கோமாவில் இருந்தவர் பழைய காதலியை கண்டதும் மீண்டார்.'
காதலின் சக்தியை எண்ணி அனைவரும் வியந்தனர்.
அன்றிரவு…
டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் வழியில் என் மனைவி புதிதாய் இரண்டு பூரிக்கட்டை வாங்கியதை பார்த்ததும் நடுங்க ஆரம்பித்தது எனக்கு!
{kunena_discuss:785}