“ எது நமக்கு இல்லையோ, அது நம்ம லைஃப்ல வராமலே இருந்திருக்கலாமே இறைவான்னு நினைச்சு அழுதேன்.. புராணத்தை பாரேன்! ராமருக்கு சீதையை பார்த்தபோதுதான் ஸ்பார்க் வந்தது! சிவனுக்கும் சக்தியை பார்க்கும்போதுதான் ஸ்பார்க் வந்தது.. நமக்கும் அந்த மாதிரி, லைஃப் பார்ட்னரை பார்க்கும்போது மட்டும் ஸ்பார்க் வந்திருந்தால், எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்! அழுகை வந்துருச்சு!”
“ஹ்ம்ம் வேற ஒன்னும் இல்லையே ? நீ நல்லாதானே இருக்க?”
“ லூசு .. இசைமித்ரன் என் கடந்த காலம்! அவன்மேல எனக்கு இப்போ எந்த ஈர்ப்பும் இல்லை! எனக்கு ஒரே ஒரு ஆசைத்தான்! அவனுடைய வாழ்வில் இன்னொரு பெண் வந்திருக்கனும்! அவளைப் பார்த்து நலம் நலமறிய ஆவல்ன்னு பாடிட்டு, இந்த டைரியை எரிக்கனும்! அதுக்கு அப்பறம் ஜெயம் ரவி மாதிரி ஹேண்ட்சம் ஹீரோ, மனசளவிலும் ஹேண்ட்சமாய் இருக்குறவன், அவனாகவே வரும்போது, அவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்!” என்று கனவுகளுடன் புன்னகைத்தாள் தேனருவி!
மறுநாள் மருத்துவமனையில்,
“எஸ் கியூஸ் மீ” விசும்பலுடன் ஒரு பெண் தேனருவியின் முன் நின்றாள்.
“யெஸ் சொல்லுங்க!”
“மிஸ்டர் இசைமித்ரன்.. ஐ சீ யூவில்… எப்படி போகணும்?” கண்ணீருடன் அவள் கேட்க, கண்களில் மின்னலுடன்,
“நீங்க?” என்று வினவினாள் தேனருவி!
“ ஐ எம் மிசர்ஸ் இசைமித்ரன்!” தேனருவியின் செவியிலேயே தேனருவி பாய்ந்தோட செய்தாள் அந்த பெண். அவளுக்கு வழி சொல்லி முடித்த தேனு ஹேண்ட்பேக்கில் இருந்த டைரியை பார்த்து
“குட் பாய்” என்று சொல்ல, அங்கிருந்த யாரோ ஒருவரின் செல்ஃபோன்,
“நலம் நலமறிய ஆவல்!” என்று பாடியது. நேற்று தான் சொன்னது அனைத்தும் நடந்திட, அந்த ஜெயம் ரவி மாதிரி ஹீரோவுக்காக காத்திருக்க தொடங்கிவிட்டாள் தேனருவி. நாமும் அவளுக்கு பாய் சொல்லிடுவோம்.
ஹாய் ப்ரண்ட்ஸ்! சிறுகதை போட்டிக்கு “ நலம் நலமறிய ஆவல்” என்ற தலைப்பு சார்ந்த கதையை கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. கதையின் வழியே “பிரிந்த காதல்” பற்றிய உணர்ச்சி போராட்டங்களை சொல்லிட நல்ல வாய்ப்பு அமைந்தது. ஒரு நாள் நமது கண்களுக்கு பூரணமாய் தெரியும் நிலவு கூட அடுத்த இரு வாரங்களிலேயே மறைந்து போகிறது! அதற்காக அந்த நிலவை நாம் தூற்றுவதில்லையே! ரசிக்கத்தானே செய்கிறோம்? அதே போல, ஒரு காலத்துல நமக்கு A-Z ஆ இருப்பாங்கன்னு நினைச்சவங்கத்தான் இப்போ எக்ஸ் ன்னு ஆகியிருப்பாங்க! காதல்ன்னு மட்டும் இல்லாமல் எல்லா உறவிலும் இந்த பிரிவும், மறைக்கப்பட்ட நுண்ணுணர்வுகளும் இருக்கின்றன. அதை சரியான முறையில் சந்தித்து சீர் செய்வோம்.
இன்னும் நிறைய கதைகள் தரணும்னு ஆசையுடன், இப்போ டாட்டா சொல்லிக்கிறேன்!
This is entry #02 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்
எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி
{kunena_discuss:1083}