அப்புறம் கடைசியா நீங்களா எதை தேடியும் வாழ்க்கைல போக கூடாது. எல்லாமே உங்களை தேடித் தான் வரணும்..அதாவது புகழ்,பணம்,வாழ்க்கைத் துணை எல்லாமே உங்கள தேடித் தான் வரணும்...நீங்கலா தேடி போக வேண்டியது உங்க குறிக்கோளை நோக்கி தான்...ஆல் தி பெஸ்ட் பிரண்ட்ஸ்.....”னு சொன்னாங்க.
அதுவரைக்கும் சும்மா படிச்சு நல்ல வேலைக்கு போனா போதும்னு நினைச்சுட்டு இருந்த எங்க வாழ்க்கைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போன பெருமைக்கு எங்க பள்ளியும் எங்க ஆசிரியர்களும் தான் காரணம்...நம்ம வாழ்கையின் மகிழ்ச்சியான தருணம்னா நம்ம குழந்தை பருவமும் பள்ளி பருவமும் தான் .எந்த வித கவலையும் இல்லாத இந்த பருவத்த யாராலும் மறக்க முடியாது...யாருக்கு எல்லாம் இந்த பருவம் நல்ல சுழலோட அமையுதோ அவங்க வாழ்க்கையின் சிறந்த மனிதர்களா இருப்பாங்க....அதனால எங்களோட ரோல்மாடல் எங்க பள்ளியும் ஆசிரியர்களும்தான்.....
எங்களிடம் உங்க வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கிட்டதுக்கு ரொம்ப நன்றி மேடம் ....ஹலோ viewers இப்ப நாம கேட்டது டைரக்டர் ருத்ராவோட பேட்டியதான் ..அது உங்களுக்குள் ஒரு சின்ன மாற்றத்தையாது ஏற்படுத்தும்னு நம்பறோம்...ருத்ரா மேடமும் அவங்க கனவுகளை நோக்கி இன்னும் பல படிகள் தாண்டி செல்றதுக்கு உங்களின் சார்பாகவும் சாம்பியன்ஸ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்... நன்றி மேடம் பேட்டி சூப்பரா போச்சு உங்கள பத்தி தெருஞ்சிகிட்டதும் நல்லா போச்சு மேடம்னாங்க பேட்டி எடுக்க வந்தவங்க...
ருத்ராவும் எனக்கும் இது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ்னு சொன்னாங்க....
ருத்ரா பேட்டி முடிச்சுட்டு வீட்டுக்கு போனதும் அவங்க அம்மா “என்னடா உன் முகம் இன்னிக்கு 1௦௦௦ வால்ட் பல்பு போல பிரகாசமா இருக்குனு” கேட்டாங்க...
”ஆமாம்மா இன்னிக்கி நா என்னோட பள்ளி பருவத்த பத்தி பேட்டி கொடுத்தேன் “ அதான்னு சொன்னங்க..
அதை கேட்டதும் அவங்க அம்மாவும் அவங்க பள்ளி பருவத்தின் நினைவுச் சுழல்களுக்குள்ள போய்ட்டாங்க......இத படிச்ச எல்லாரும் உங்க நினைவுகளான பள்ளி பருவத்துக்கு போவிங்கன்னு நம்பறேன்............
போட்டின்னு சொன்னதும் ஒரு ஆர்வத்துல எழுதிட்டேன்...போட்டிக்கு தகுதி பெற levela இருக்கான்னு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்.
This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – பள்ளி நாட்கள்
எழுத்தாளர் - ஆர்த்தி R
{kunena_discuss:1083}