2017 போட்டி சிறுகதை 15 - உன்னவிட ஒசந்தது ஒன்னுமில்ல – புவனேஸ்வரி கலைசெல்வி
This is entry #15 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுப்பக்கம்
எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி
மார்கழி மாத குளிர்காற்று ஜன்னல் வழியே அழையா விருந்தாளியாய் அறைக்குள் நுழைந்திட ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபடியே திரும்பி படுத்தான் இனியவேல். அருகில் உறங்கும் மனைவியின் மீது கை போட எத்தனித்தவன் அங்கு அவள் இல்லாமல் போகவும் தூக்கம் கலைந்திருந்தான். அருகில் இருந்த செல்ஃபோனில் நேரத்தை பார்த்தான்.
அதிகாலை மணி 6. இந்த நேரத்தில் எங்கே சென்றிருப்பாள் என்ற குழப்பத்துடன், “திலி.. திலி.. எங்கடீ இருக்க?” என்றான் இனியவேல். பொதுவாக அவன் இப்படி அழைக்கும்போதெல்லாம், “ ஏங்க மாமா, திலி எலின்னு என் பேர ஏலம் போடுறீங்க? மைதிலின்னு சின்ன பேரு கூடவா உங்க வாயில வராது? நீங்கல்லாம் என்னத்தான் பெரிய படிப்பு படிச்சிங்களோ!” என்று சிணுங்குவாள் மைதிலி. ஆனால், இன்றோ அவன் பலமுறை அழைத்தும் பதிலில்லை.
பதறி எழுந்தே விட்டிருந்தான் இனியவேல். அவனுக்கே அவனது மாற்றத்தை காண ஆச்சர்யமாய் இருந்தது. இதே மைதிலியை ஒரு வருடத்திற்கு முன்பு, “ என் கண்ணு முன்னாடி அடிக்கடி இப்படி வந்து நிற்காதே” னு சொன்னதென்ன இப்போது அவளை காணவில்லை என்றதும் தவிப்பதென்ன.
தேங்காய் எண்ணெய் வாசம் வீசும் கூந்தலை, அழுந்த படியும்படி தலைவாரி, பவ்டரால் முகத்திலேயே கோலம் போட்டு வைத்துக் கொண்டு, “ மாமா” என்று அவள் அழைத்தபோதெல்லாம் ஒரு காலத்தில் முகம் சுளித்தவன் தான் இனியவேல். ஆனால், இப்போது கேட்டால் தன் மனைவியை விட பேரழகி இல்லை என்பான்.
“ தேங்க்ஸ்” என்ற வார்த்தையை கூட சரியாய் உச்சரிக்க தெரியாமல் “டாங்க்ஸ்ஸூ” என்று சொன்னவளை பார்த்து நெற்றியில் அடித்துக் கொண்டவன், இன்று அவளுக்கு கூகுலையே அறிமுகப்படுத்தி வைத்திருந்தான்.
இதுதான் திருமண பந்தத்தின் மகத்துவமா? எங்கோ பிறந்து வெவ்வேறு வாழ்க்கை முறைகளை சுமந்த இரு நெஞ்சங்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்தப்பின் எப்படித்தான் இணைந்தே துடிக்க ஆரம்பிக்கின்றனவோ, அது யாருக்குமே புரியாத மர்மம்.
இனியவேல், விவசாயத்தையே மேற்கல்வியாய் தேர்ந்தெடுத்து படித்தவன். படித்து முடித்துவிட்டு, தனது சொந்த ஆய்வுக்காக அந்த குக்கிராமத்திற்கு வந்ததும், ஒரு ஆபத்திலிருந்து மைதிலியால் காப்பாற்றப்பட்டதும், அதனால் இருவரும் இணைத்து பேசப்பட்டு வேறு வழியில்லாமல் ஊருக்கு கட்டுப்பட்டு அவன் மைதிலியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டதும் நினைத்து பார்க்கும்போதே வியப்பாய் இருந்தது அவனுக்கு.
பொதுவாகவே, பட்டினத்து வாழ்க்கையை அதிகம் விரும்பாதவன் இனியவேல். தனது திருமணத்திற்குபின் இரு வீட்டாரின் பேச்சையுமே சமாளிக்க பிடிக்காமல், மைதிலியுடன் தனி குடித்தனம் நடத்த தொடங்கியிருந்தான் அவன். படிப்பிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லாத பெண்ணை தலையில் கட்டிவிட்டார்களே என்ற கோபம் கண்களை மறைக்க, அந்த கோபத்திற்கு மைதிலியை பலியாக்கினான் இனியவேல்.
நாளுக்கு நாள் அவளது பொறுமை, அன்பு, அக்கறை, சாமர்த்தியம் என அனைத்தையும் பார்த்தவனுக்கு, இவளே தன்னவள் என்ற அசைக்க முடியாது பிணைப்பு ஏற்பட்டது.
அதிகாலையில் எங்கே போனாள் இவள்? என்று யோசித்தவாரே தனது வீட்டிலிருந்து வெளிவந்தான் இனியவேல். வீட்டை சுற்றி ஒரு பக்கம் தோட்டம், இன்னொரு பக்கம் வயல்வெளியென அழகியலுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது அந்த இடம். எவ்வளவு வேலை இருந்தாலும் இந்த இயற்கை அழகையெல்லாம் ரசிப்பது இனியவேலின் பிடித்தம். ஆனால் இன்றோ எதுவும் கருத்தில் பதியவில்லை.
“ திலி.. மைதிலிம்மா எங்க இருக்க?” என்று அக்கறையும் தவிப்புமாய் இனியவேல் அழைக்க அவன் குரல் செவிகளில் விழுந்தும் அதற்கு பதில் கூறும் நிலையில் இல்லாமல் இருந்தாள் மைதிலி.
“எல்லாம் திருவிழாவுக்கு போன வினைதான். அப்போவே மாமா சொன்னாரு போக வேணாம்னு நான்தான் கேட்கல!” என்று தன்னையே திட்டிக்கொண்டவளுக்கு அங்கு நடந்தது நினைவிலாடியது.
இரண்டு நாட்களுக்கு முன் தனது ஊர் திருவிழாவுக்காக வந்திருந்தாள் மைதிலி. இனியவேலுக்கு அங்கு செல்ல கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனினும் மைதிலியை தனியாக அனுப்ப மனமில்லை அவனுக்கு. மேலும், அவசரமாய் நடந்த திருமணம் என்றாலும், தங்களது வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று காட்ட வேண்டும் என்று நினைத்தே கிளம்பினான் அவன்.
இனியவேல்- மைதிலி இருவரையும் அனைவரும் ஆசிர்வதிக்க, இரண்டு நாளுமே சந்தோஷமாகத்தான் கடந்தன. அந்த ஒரு சம்பவத்தை தவிர!
“ சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதம்மா! மாமா ஒன்னும் அப்படி பட்டவர் இல்லை.. மத்தவங்களை வெச்சு என் மாமாவ பத்தி தப்பா பேசாத!” என்றாள் மைதிலி.
“ அட கூறு கெட்டவளே ! நானும் மாப்பிள்ளை பத்தி தப்பா சொல்லலடீ.. ஆனா, காலா காலத்துல எல்லாம் சரியா நடக்கணும்ல? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் திரும்பிடுச்சு… இன்னமும் நல்ல செய்தி சொல்லாம இருக்குற!” என்று குறைப்பட்டுக் கொண்டார் மைதிலியின் தாயார். அவர் அதைபற்றி பேசும்போதே சுரீர் என்று வலித்தது மைதிலிக்கு. சட்டென கண்களில் கண்ணீர் துளிர்த்திட,