ப்ளீஸ் லீவ் மீ அலோன் தன்யா..நீயும் என்ன புரிஞ்சுக்க மாட்ற விடு..எனக்குநு என்னவோ அதுவே நடக்கட்டும்..ரீச் ஆய்ட்டு மெசெஜ் பண்ணு என்றவாறு கிளம்பிவிட்டான்..
பெண்ணவளோ மொத்தமாய் உடைந்துவிட்டாள்..இருக்கும் இடம் கருதி அழுகையை அடக்கிக் கொண்டு ஹாஸ்ட்டல் வந்தடைந்தாள்....இரண்டு நாட்கள் கழித்து சர்வேஷ் அவளை போனில் அழைத்திருந்தான்..தன்யா வீட்ல ஒரு வழியா சம்மதம் வாங்கியாச்சு சென்னைலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்நு சொல்லிட்டாங்க ..ஷப்பாபாபா இப்போ தான் பாதி தலைவலி குறைஞ்சமாறி இருக்கு..இவ்ளோ நாளா வீட்ல எவ்ளோ ப்ராப்ளம்ஸ் தெரியுமா..ஹே என்னடீ நா பேசிட்டேயிருக்கேன் நீ அமைதியாவே இருக்க??
ம்ம் ஒண்ணுமில்ல ரொம்ப நாளுக்கு அப்பறம் நீ பழையமாறி பேசுறியே அதான் வாயடைச்சு போய்ருக்கேன்..என ஏதோ ஒரு கவலை குரலில் தெரிய கூற
சுருக்கென்றது சர்வேஷ்க்கு..நா எப்பவும் போலதான் இருக்கேன் நீ வீணா மனச போட்டு குழப்பிக்காத தன்யா..என சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவனுக்கு திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய சில கடமைகள் நினைவிற்கு வர அதில் மூழ்கிப் போனான்.. இவ்வாறாக நாட்கள் செல்ல கல்யாண ஏற்பாடுகள் ஒருபுறம் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது…
தன்யாதான் நாளுக்கு நாள் கவலைகளுடனேயே உலன்று கொண்டிருந்தாள்.திருமணம் என்றாலே மணமகளுக்கு தோன்றும் பூரிப்பையும் தாண்டி அவள் மனதில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன..சர்வேஷ் முன்பு போல் அல்லாது மாறிவிட்டானோ,இப்போதே இப்படி என்றால் திருமணத்திற்கு பின் தன் நிலை என்ன??சின்ன சின்ன விஷயத்திற்கும் அவன் குடும்பத்திற்காக தன்னிடம் சண்டை போடுவானோ என தன்னை தானே கேட்டு நொந்து கொண்டாள்..நாளை ப்ரச்சனை என்றாலும் யாரிடம் இவள் மனம்விட்டு கூறமுடியும் தன்னை பெற்றவர்களே முதல் வார்த்தையாய் நீயே தேர்ந்தெடுத்த வாழ்க்கைதானே இது என்றுதானே கூறுவார்கள்..இனி அவ்வளவுதானா எனக்கென்று சிந்திக்க போகிறவர்கள் யார் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..
நாட்களும் பறந்தோட திருமண நாளும் வந்தது..கவலைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி மணபெண்ணுக்கேயுரிய நாணம் பூரிப்பு சந்தோஷம் அவளை சூழ்ந்து கொள்ள சர்வேஷுமே உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தான்..தன்னவள் கழுத்தில் மூன்று முடிச்சுபோட்டு அவளை ஏறிட்டு பார்க்க அவளோ கண்கள் குளமாக அவனையே நோக்கியிருந்தாள்..சட்டென அவளை லேசாய் சாய்த்து தலையில் மென்மையாய் முத்தமிட்டான் அருகிலிருந்வர்ளின் ஆரவாரத்தையும் மீறி தன்யா தன்னவனை ஒரு நொடி காதல் பொங்க பார்த்தாள்..
அதனை தொடர்ந்து அனைத்து சம்பிரதாயங்களும் இனிதே நடைபெற மாலை ரிசப்ஷனும் முடிந்து மணமக்கள் சர்வேஷின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..தன்யாவின் பயம் மறுபடியும் தலைதூக்கி கொண்டது புது இடம் புது மனிதர்கள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சர்வேஷ் எப்படி நடந்து கொள்வான் என மனவோட்டம் ரெக்கை கட்டி பறக்க என்னம்மா இனி இது உன் வீடு சந்தோஷமா உள்ள வா என்று கூறியது அவளது மாமியாரேதான்..இதற்கு முன் புடவை எடுக்க சென்ற போதும் நிச்சயதார்தத்திலும் சந்தித்திருக்கிறாள் ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு உரிமையாய் பேசியதில்லை..ஆச்சிரியம் கலந்த புன்னகையை பதிலாய் அளித்தவள் அவர்களை பின் தொடர்ந்து உள்ளே சென்றாள்..
இரவுக்கான அலங்காரங்களை மாமியாரும் நாத்தனாருமாய் அவளுக்கு ஆரம்பிக்க பொம்மை போல் அமர்ந்திருந்தாள் தன்யா..என்ன தன்யா எங்களலா ஏதோ ஏலியன்ஸ் மாறி நினைச்சுட்டு உக்காந்திருக்க..அவ்ளோலா இங்க வொர்த் இல்ல டியர்..அதெல்லாம் சும்மா இந்த வீட்டு ஆம்பளைங்களுக்காக நாங்க குடுத்த பில்டப்ஸ்..சோ டோண்ட் வொரி நா உனக்கு ஒரு நல்ல ப்ரெண்டா கண்டிப்பா இருப்பேன்..இந்த ஷாக்குடுத்தது வேற யாரு தன்யாவின் நாத்தனார் தான்..
அண்ணி..
ஹா ஹா உன் மைண்ட் வாய்ஸ் புரியுதுடா பட் நா சொல்றத நீ தைரியமா நம்பலாம்..லவ் மேரேஜ்னாலே ஆயிரம் பேசுவாங்க இதுல இன்டர்கேஸ்ட்னா கேக்கவே வேணாம் சோ அப்பா என் ஹஸ்பெண்ட் எல்லாரும் கொஞ்சம் டெரராவே இருப்பாங்க பட் போக போக சரியாயிடும்..நீ எத நினைச்சும் கவலபடாத அம்மா உனக்கு நல்ல கம்பனியா இருப்பாங்க கண்டிப்பா என்று பொரிந்து தள்ள மாமியாரோ அன்பாய் அவளை பார்த்து சிரித்தார்..ஏனோ தன் கவலையெல்லாம் ஒரு நொடியில் பறந்தோடி விட்டதாய் தோன்றியது..
தேங்க்ஸ் அண்ணி..
யூ ஆர் மோஸ்ட் வெல்கம் பேபி சரி சரி வா அப்பறம் என்தம்பி உன்னை தேடி இங்கேயே வந்தாலும் வந்துருவான் என அவளை அவனறையின் வாசலில் விட்டுவிட்டு கீழிறங்க,அவங்க என்ன புரிஞ்சுகிட்ட அளவு கூட என் சர்வேஷ் புரிஞ்சுக்கலயே அவனும் பழைய மாறி என்னோட அன்பா ரெண்டு வார்த்தை பேசினா அதுபோதும் எனக்கு என தயங்கியவாறே உள்நுழைந்து கதவை தாழிட்டு திரும்ப கண்ணிமைக்கவும் மறந்து நின்றாள்..அவளுக்கு மிகவும் பிடித்தமான அவளது போட்டோ மிகப்பெரிய ப்ரேமில் அவர்களது அறையில்..ஆரம்ப காலத்தில் சர்வேஷ்ஷிடம் இந்த போட்டோவை காட்டி பேசியதுண்டு..அவளே மறந்த ஒரு விஷயம் இன்று அவள்முன் பிரம்மாண்டமாய்..அதிலிருந்து விழியகற்றும் முன் அவளவன் பின்னிருந்து அவள் கண்களை மூட,சர்வேஷ் என்ன பண்றீங்க??