மேடைக்கு செல்லும் போது எனை நோக்கி திரும்பிய எழில் கண்ணடித்துவிட்டு சென்றுவிட்டாள்..
கம்ரபீமாய் மேடையில் ஏறியவள் இருகரம் குவித்து அனைவரையும் நோக்கி "வணக்கம்" என்றாள்.
“தோழிகளே, நம்ம பிரின்சிபல் மூதூரெழிலினு சொன்னபோது யாரது? என்ற பாவனையை உங்களிடம் கண்டேன். உங்களால் மூக்கணாங்கயிறு, மூக்கழகி , மூக்கி என செல்லமாக அழைக்க பட்டவள்தாங்க மூதூரெழிலி...
என்னடா இந்த பெயர்களை கேட்டு ஓடியவள் இன்று தன்னை அப்பெயர் கொண்டு அறிமுக படுத்திக்கொள்கிறாளே என்று ஆச்சர்யமாக இருகிறதா...??"
“………..”
"அதற்கு காரணம் இந்த பத்து ஆண்டுகள்..நான் சந்தித்த மனிதர்கள்... எதிர்கொண்ட சூழ்நிலைகள் தான்.. தோற்றம் நிலையில்லாதது என்பதை அறிந்து கொள்ள இந்த பத்தாண்டுகள் தேவை பட்டது தான் காரணம்.. மூக்கணாங்கயிறு, மூக்கழகியாக இருந்தவள் கலெக்டர் என தோற்றம் தரித்தது தான் காரணம்.. எனது பழைய தோற்றம் மறையவில்லை, ஆனால் கலெக்டர் என்ற தோற்றதால் அதை போர்த்தி கொண்டது தான் காரணம்...”
“………………..”
“கல்லூரி காலம் நம் வாழ்வின் வசந்த காலம்.. கேலிகள் சண்டைகள் சச்சரவுகள் மகிழ்ச்சி என அனைத்தும் கலந்தது.. என்னை போல் சிலர் அதை சிக்கல் ஆக்கி கொள்கிறார்கள்... அதற்கு காரணம்… பிறர் கேலிகளை நாம் எடுத்து கொள்ளும் முறையும்.. சில வரம்பு மீறிய கேலிகளுமாகும்…”
“இதை குறையாக நான் கூறவில்லை... என்னை போல் கேலிக்கு உள்ளாக்கப்பட்டோர் உயிர்தெழுந்தால் பரவாயில்லை... இல்லையேல்..???”
“……………….”
“எனிவேஸ் என் தோழிகளான உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கண்டதை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்..
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்கள்...
இந்த பழைய மாணவர் கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்தித்தலில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி",என முடித்தாள்.
அதே கம்ரபீத்துடன் இறங்கி என்னருகில் வந்து,
"ஹே!! ஸெல்ப் டப்பா...!! என் ரீஎன்ட்ரி எப்படி..???",என அணைத்துக்கொண்டாள் எனை.
This is entry #31 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்
எழுத்தாளர் - வசுமதி
{kunena_discuss:1083}