" இவ்ளோ தானா, இன்னும் இருக்கா இங்க பாரு குட்டிமா. எல்லாமே நாம எடுத்துக்குறத பொறுத்து தான் டா இருக்கு. என் வாழ்நாள் முழுக்க உன்ன சந்தோசமா வச்சுப்பேன் ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. நமக்கு பாப்பா பொறக்கலனா ஒரு பாப்பாவ தத்தெடுத்துக்கலாம். நாம பட்ட எந்த கஷ்டமும் இல்லாம அந்த பாப்பாவ பாத்துக்கலாம் டா.
இது நம்ம வாழ்க்கை டா.இந்த வாழ்க்கையை ஒரே ஒரு தடவை தான் வாழப்போறோம். அத நமக்கு பிடிச்ச மாதிரி சந்தோசமா வாழலாமே டா. அப்படியே எந்த பிரச்சனை வந்தாலும் நாம ரெண்டுபேரும் ஒண்ணா சேர்ந்து சமாளிப்போம்.....
"ஹலோ மிஸ்.யாகவி, உங்களுக்கு மிஸஸ். யாகவி விபாகரனா நம் வாழ்க்கையின் மீதி நாட்களை என்னுடன் கழிக்க சம்மதமா? " என அவள் முன் தனது வலது கையை நீட்டினான் .
கண்களில் கண்ணீருடனும், இதழ்களில் உறைந்த புன்னகையுடனும் அவன் கரத்தில் தன் கையை பதித்தாள் யாகவி.
அதுக்கப்புறம் நம்ம ஹீரோ சும்மா இருப்பாரா ? Cut பண்ணா marrige தான்.
அடடா நம்ம யாகவி மேடமோட பிளாஷ்பேக் முடிஞ்சுது. இப்போ நிகழ்காலத்துக்கு போகலாமா ?
"ஹே ! குட்டிமா என்ன dreams ah? எந்த நாட்டுல டூயட் ஆடுறோம் என கேட்டு கொண்டே வந்தான் நம் நாயகன்.
"ஆமா இப்போ அது மட்டும் தான் குறைச்சல்...."
"வேற எதுக்குடி குறைச்சல், சரி உன்
dreams ல ஆடலனா என்ன இப்போ ஆடுவோமா என அவளை கைகளில் ஏந்தி கொண்டான்....."
அவர்களின் மனநிலையை பிரதிபலிக்குமாறு பாடல் மிதந்து வந்தது...
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே.....
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே......
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி ....
என் கண்களின் ஓரம் நீர்த்துளி....
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே....
Thank you team,
ஹாய் friends, இது என்னோட முதல் கதை. படிச்சிட்டு கதை எப்படி இருக்குனு சொல்லுங்க தோழிகளே.....pls . மீ waiting....
This is entry #49 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை...
எழுத்தாளர் - சுஜி பிரபு
{kunena_discuss:1083}