2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமி
This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - அபிராமி குமாரஸ்வாமி
மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது. தொண்டை குழி வழியே எச்சில் முழுங்க கூட முடியாத அளவு பயம் பின்னி பிணைந்தது. இன்றோடு,"தன் கனவுகளும், ஆசைகளும் கதிரிக்கப்பட்டது" என்ற எண்ணம் ஒன்றோடு, ஏறெடுத்து பார்த்தாள். அந்த மஞ்சள் கயிறு, தூக்கு கயிறாய் தெரிந்தது.
முதல் முறை, அவன் முகம் கண்டாள் அருகில், அவன் பெயர் தவிர ஏதும் அறியாதவள். ஒரே மாதத்தில்,பெரியோர்கள் நிச்சயித்த திருமணம்.அவன் கண்களிலும் ஜீவன் இல்லை, இவளை போலே அவனும் கைப்பாவையாய். ஓரிரு அணைத்து சம்பிரதாயமும் முடிவு பெற, சுற்றமும் நட்பும் விடைபெற்று சென்றனர். புது வீடு, இருவருக்கும் பேசிக்கொள்ள விருப்பம் இல்லை. இவர்களை வாழ்த்திவிட்டு பெற்றோரும் விடை பெற்றனர்.
ஆளுக்கொரு மூலையில் , அவன் ஒரு புறம் மடிக்கணினியை லொட் லொட் என தட்டிக்கிடந்தான், எதோ இவள் வாங்க வேண்டிய அடி எல்லாம் அது வாங்கிகொண்டார்போலே தெரிந்தது. சரேல் என்று அலைபேசி எடுத்து, "ஜீ ,அதுலாம் இல்ல, எதோ பெரிய பிரச்னை மாறி இருக்கு,என பேசிகொன்டே விருட்டென கிளம்பிப்போய்விட்டான்.
சரி,இனிமேல் இதுதான் என கண்ணீர் துடைத்து எழுந்து வீட்டை சரி செய்தாள். அவன் பெயர் தாங்கிய ஒரு அட்டை பெட்டி. பிரித்து பார்க்க, முதலில் கண்ணில் பட்டது அவன் பழைய நாட்குறிப்பு .
வருடம்:1997, பிரித்தாள் ,முதல் பக்கம், டிங்குவின் டைரி, பெயர் படித்ததும் அவள் கண்கள் விரிய, கைகள் நடுங்க... கை தவறி டைரி கீழ விழ , சிதறின சில காகிதங்களை, ஒரு புகைப்படமும். பார்த்தவள் கண்களில் திகைப்பும் சிரிப்பும் கலந்து கண்ணீர் மல்க ஓடினாள். பத்திரமாய் வைத்திருந்த சிறு பெட்டிக்குள் இருந்த புகைப்படம், பத்து வயது சிறுவர் கூட்டம். எடுத்து,இரண்டும் ஒரு சேர வைத்து வாய் விட்டு சிரித்து கொண்டாள். யாரை இத்தனை நாட்கள் காண தவம் கிடந்தாளோ அவனே இவன்.
அவன் வைத்திருந்த புகைப்படத்தின் பின் புறம், பப்பு உன்னை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று எழுதிருந்தான்.. இவள் நினைவலைகள் பின்னோக்கி எழுத்து சென்றன.. அந்த பிஞ்சு பருவத்தில், ஆண்டு விடுமுறை எதிர்பார்த்து காத்திருப்பாள் இவனை காண மட்டுமே..ஆம், ஆண்டிற்கு ஒரு முறை இவள் வீட்டருகே இருந்த அவன் உறவினர்களை காண வருவான்.. ஒரு வாரம் தான் ..மூன்றாண்டுகள் தான், பின் இவள் எங்கோ அவன் எங்கோ..
நாட்கள் பல கடந்திருப்பினும், அந்த பாசம் எவரிடமும் இவள் உணரவில்லை.. இவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது வீட்டின் அழைப்புமணி .. அவன் தான்.. சுரத்தை இல்லாமல் நின்றவனை மலர்ச்சியுடன் வரவேற்றாள், அவன் கண்ணில் ஒரு கேள்வி,சிறு ஆச்சர்யம்.
அருகே வந்த அவள், "டிங்கு ,யாருக்கும் தெரியாம நாளைக்கு உனக்கு சேமியா ஐஸ் வாங்கித்தரேன்" என்று குரல் மாற்றி கண்ணடித்து சொன்னாள். திரு திரு என முழித்தவனிடம், இரு புகைப்படமும் காட்டி புன்னகை சேர்த்தாள். அவன் அவளிடம் உதிர்த்த, முதல் வார்த்தை, பப்பு ?! அவர்கள் கல்யாண பத்திரிகையும் எடுத்து, கெளதம் வெட்ஸ் நந்தினி என்று இருந்ததை திருத்தி, டிங்கு வெட்ஸ் பப்பு என மாற்றினாள் ..
பண்பலையில்.. ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி ஒலிக்க ..
சொர்க்கத்தில் நிச்சயிக்க பட்ட ஒரு அழகிய வாழ்க்கை இனிதாய் பூத்தது..
This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - அபிராமி குமாரஸ்வாமி
{kunena_discuss:1083}