(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 77 - உன் கைகள் கோர்த்து உன்னோடு வாழ - சுஜி பிரபு

This is entry #77 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சுஜி பிரபு

Love

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் யாழினி...முகம் கொள்ளா மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் அமர்ந்திருந்தான் அவளை திருமணம் செய்த புண்ணியவான்......அவனது திருநாமம் ஹரி.

அவர்களது அருகில் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க , எதிலிருந்தோ காப்பாற்றி விட்ட நிம்மதியுடன் நின்று கொண்டிருந்தனர் ராதா,கிருஷ்ணன் தம்பதியினர்(யாழினியின் பெற்றோர்).

ஆம், தன் தந்தையின் விருப்பத்திற்காகவும்,

சந்தோசத்திற்காகவும் தானே இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள். அவரின் இந்த மனம் நிறைந்த புன்னகைக்காக எதுவும் செய்யலாம்....... ஆனால் திருமணம் ?

சற்று திரும்பி மேடையின் அருகிலேயே தன் அண்ணன் ராமுடன் நின்று தன்னை மகிழ்வுடன் பார்த்து கொண்டிருந்த தன் தோழி மற்றும் அண்ணியான உமாவை பார்த்தாள். அவள் கையில் எவ்வித கவலையும் இன்றி, தன்னை காண்போருக்கெல்லாம் இன்பத்தை மட்டுமே தர வேண்டுமென்று தன் போக்கை வாயை திறந்து சிரித்து கொண்டிருந்தது அந்த செல்லச்சீட்டு.......

தன் இருண்டு போன வாழ்விற்கு ஒளி ஏற்றும் தீபமாய் வந்த தேவதை அகல்யா.....அவளுக்காகவேதான் மறுமணத்தை பற்றி யோசிக்காததும், இன்றும் அவளுக்காகவேதான் இந்த மணக்கோலத்தில் அமர்ந்திருப்பதும்......

அப்படியே நீண்டு கொண்டிருந்த நினைவுகளுக்கு கடிவாளமிட்டு , கண்முன் இருந்த சடங்குகளுக்கு இயந்திரமாய் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தாள்.........

திருமண சடங்கில் உணர்வற்று இருந்தவளுக்கு அனைத்தும் முடிந்த பின் தன் மகளை கையில் வாங்கிய பின் தான் சுயஉணர்வே வந்தது......மகளின் அழகிய புன்னகையை பார்த்து , என் மகளது இந்த புன்னகையை என்றுமே வாட விடாமல் பார்த்து கொள்ள முடியுமா ?

கணவனாகப்பட்டவன் எவ்விதம் தங்கள் இருவரிடமும் நடந்து கொள்வான் ? என் எதிர்காலம் இனி எவ்விதம் இருக்கும் என அவளை மருட்டவே செய்தது......

யாழினி , அப்பாவிற்கு செல்ல இளவரசி....அண்ணனுக்கு அன்பான குட்டி தங்கை.... அம்மாவிற்கு தன்னுடன் எப்பொழுதும் வாயடித்துக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் திரியும் இன்னொரு மாமியார்.....அழகான ராட்ஷசி......... கல்லூரியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி......அவளுடையது அம்மா, அப்பா, அண்ணா மற்றும் நண்பர்கள் அனைவரும் நிறைந்த சிறிய உலகம்......இதை தவிர வேறு சிந்தனைகள் கிடையாது....இதிலேயே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும் வித்தை அறிந்தவள்.......

அவள் குடும்பமும், நண்பர்களும் அவளுக்கு இந்த சமூகத்தின் மீதும் , சக மனிதர்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும், ஆரோக்கியமான சிந்தனையும் பதியச் செய்திருந்தனர்......எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது அந்த நாள் வரும் வரை.......

கையிலிருந்த சிறுமலர் தூக்கத்திற்காக சிணுங்கவும் தான் நடப்பிற்கு வந்தாள் யாழினி......

கண்களை துடைத்து கொண்டு மகளிடம் ,

அம்முக்குட்டிக்கு தூக்கம் வந்துருச்சா ?

தூங்க போலாமா தங்கபிள்ளை...

என கேட்கவும், அழகாய் இதழ் விரித்து சிரித்தது அக்கன்று... பின் பிள்ளையை மெத்தையில் இட்டு தானும் அருகில் படுத்து மெதுவான குரலில் பாடலானாள்.........

"கண்கள் நீயே காற்றும் நீயே

தூணும் நீ துரும்பில் நீ

வண்ணம் நீயே வானும் நீயே

ஊணும் நீ உயிரும் நீ

பல நாள் கனவே ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே

எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ வேறில்லை "

குழந்தையை தூங்க வைத்து விட்டு நிமிர்ந்தால் அப்பொழுது தான் அறைக்குள் வந்தான் யாழினியின் கணவனாகப்பட்டவன்.......

அவனை அறைக்குள் பார்த்ததும் அவளது மேனி ஒருமுறை அதிர்ந்து அடங்கியது...மனமோ யாழி "இவன் உன் கணவன், இன்பமோ துன்பமோ இனி வரும் உன் வாழ்க்கை இவனுடன் தான்" என அறிவுறுத்தியது.....

அவன் அவளருகே நெருங்கி வர வர கண்களை இறுக்கி மூடி கொண்டு தன் நடுக்கத்தை கட்டுப்படுத்தினாள். இருப்பினும் அது முடியாமல் போகவே அப்படியே மயங்கி சரிந்தாள் யாழினி.....

வேரற்ற மரமாக சரிந்தவளை பாய்ந்து சென்று தாங்கி கொண்டான் ஹரி...ஹே அம்லு இங்க பாரு டா. உனக்கு ஒண்ணும் இல்ல டா. பாரு அம்லு... இங்க வேற யாரும் இல்ல டா. கண்ணு முழிச்சுக்கோ அம்லு.பாரு டி.... முகத்தில் நீர் தெளித்தும் கண் விழிக்காமல் இருந்தவளை கண்டு உயிர் போகும் வலியை உணர்ந்தான்.....பின் சூழ்நிலையை உணர்ந்து அவனது அம்லு வை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்று அவளை அனுமதிக்கும் வரையிலும் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.