சிறுகதை - பூரணம் - அர்ச்சனா V

மலர் மருத்துவமனை
நள்ளிரவு நேரம்.
நர்ஸ்!! ஆக்ஸிஜன் மாஸ்க்க அந்தம்மாக்கு வைங்க! ஈசீஜீ கனக்ட் பண்ணுங்க. CPR ப்ரோப்ஸ் குடுங்க! க்விக்! போஸ்ட் சர்ஜரி இப்படி அரெஸ்ட் வரக்கூடாதே!!
"ஜகதோதாரண... அடிசிதளே யசோதே..."
ஜயஸ்ரீயின் குரல் சில்லென்ற காலைப்பொழுதை ரம்யம் ஆக்கியது. ஜனித்ரி தன்னை மறந்து பாடினாள்."புரந்தர விட்டலனா.."என்ற போது மனம் லேசாகியிருந்தது. ஜனித்ரிக்கு காலையில் காபியுடன், பம்பாய் ஜயஸ்ரீயின் காபி ராகத்தில் இந்த பாட்டு வேண்டும். இது ஒரு வகை தியானம்.
"ரியா..அபிநன்த்...ரெண்டு பேரும் எழுந்துருங்க டா..." வழக்கமான சுப்ரபாதம் ஓதினாள். "ஏம்மா,தெனம் இதே தான் பாடுவியா? வேற பாட்டு பாடேன்..போர் அடிக்கறது மா..ஜகதோதாரண..."
அடுத்த ஒரு மணி நேர மாரதானாய் தானும் மித்ரனும் கிளம்பி,ரியா மற்றும் அபி்யை கிளப்பி மாமியாரிடம் கொடுத்து, பைக்கில் ஆஃபீஸ் கிளம்பினாள்.
ஆஃபீஸ் சென்றதும் ஆஃபீஸ் சென்றதும் வாட்ஸப்பில் மித்ரன். "நாளைக்கு அப்பாயின்மண்ட்; be ready".
அடுத்த நாள் ஆஃபீஸ் விட்டு அந்தக் கிளினிக் சென்றனர். அந்த டாக்டர் படு பிஸியான ஸ்பஷெலிஸ்ட்; ஃபீஸ் மட்டும் 1000 ரூபாய்;இரண்டு மாதம் முன்னே அபாயிண்ட்மெண்ட் வாங்கணும். டோகன் வாங்கிக்கொண்டு வரிசையில் அமர்ந்தனர்.
மித்ரன்-ஜனித்ரி: பார்ப்பவர்கள் பொறாமை படும் அளவு எல்லா பொருத்தமும் அமையப் பெற்றவர்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் நம்ப முடியாத அளவுக்கு அந்நோன்யம். இரண்டரை வருட தாம்பத்யத்தில் உதிர்ந்த முத்து ரியா. கார்ப்பரேட் என்னும் மாய வலையில் சிக்கிய விட்டில் பூச்சிகள்! வீடு,கார்,பெர்சனல் லோன்கள் குருவி தலையில் பனங்காய்களாய் அழுத்தினாலும், தீப்பெட்டி வீட்டிற்குள் இன்றைக்கு அரிதாகிப்போன கூட்டுக்குடும்பமாய் வாழ்பவர்கள். வாழ்க்கை சீராய் போய்க்கொண்டிருந்தது. இவர்களின் உலகம் ரியா...அவளுக்கு வயது ஐந்து! இதைக் கேட்டவுடன் அனைவரும் கேட்பது..."எப்போ தம்பி பாப்பா வரப் போரான்?"
டோகன் 34. மித்ரன்-ஜனித்ரி உள்ள போங்க.
எண்ண அலைகள் கலைந்திட உள்ளே சென்றார்கள். டாக்டர் "மகேஷ் எல்லாம் சொன்னான். Reports பாக்கலாமா?" என்றார். ஒரு பெரிய ஃபலை நீட்டினாள். ஒரு ஐந்து நிமிடம் அதை புரட்டி எடுத்தார். "ம்ம்ம்..கொஞ்சம் கஷ்டமான கேஸ் தான்; பாக்கலாம். யூ சீ..ப்ளட் ரிலேஷன்னு யாரும் இல்ல பாத்தீங்களா...அதான் சிக்கல். என்னால் முடிந்த வரை முயற்சி பண்றேன். அப்றம் அவன் செயல். உங்க ப்ளட் சாம்பிள் குடுத்துட்டு போங்க".
ஜானு-மித்ரன் இருவரும் க்ரைஸ்ட் ஃபெயித் விடுதியில் ஃபார்ம்ஸ் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வந்திருந்தார்கள். இரண்டாவது பிள்ளையாக கடவுளால் ஜனிக்கப்பட்டு மனிதரால் உதரப்பட்ட ஒரு பிஞ்சை தங்களுடையதாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்கள். காராவின் மூலம் ரெஜிஸ்டர் செய்துவிட்டு குழந்தையின் அழைப்பிற்காக காத்து கிடந்த காலம் அது. "அம்மா தம்பி எப்போ வருவான்? இந்த புக்ஸ், டாய்ஸ்லாம் தம்பிக்கு. ஓகே?" ரியா தயாராக இருந்தாள்.
"எதுக்கும் லீகல் ஒபினியன் வாங்கிடுங்க; ஏன்னா இது பரம்பரை சொத்து விஷயம். எவனோ வந்து அனுபவிக்கணும்னு உங்க தலையெழுத்துனா யாரு என்ன செய்ய முடியும்?ஏன்டா அவதான் சமூகம் அது இதுன்னு ஆடறான்னா நீயுமா? எந்த நேரத்துல எப்படி ஜனிச்சுதோ? எவன் ரத்தமோ என்னவோ?"
"அம்மா கொஞ்சம் வாய மூடறீங்களா? உங்களோட சம்மதம் வேணும்னு மரியாதைக் குடுத்தா ஏன் தேளா கொட்றீங்க? இதுக்கு மேல யாராவது பேசினா நல்லா இருக்காது. உங்க சொத்த யாருக்கு வேணாலும் எழுதி வெய்யுங்க. ஒரு பைசா எங்களுக்கு வேணாம்". மித்ரன் கத்தினான். அவன் பெற்றோருக்கு துளியும் இஷ்டமில்லை.
அன்று ப்ரகாஷ்-வித்யா தம்பதியிடமிருந்து கால் வந்தது. "ஒரு குழந்தை வந்திருக்கு, வரீங்களா?" ஒரு வித பதபதைப்புடன் உள்ளே நுழைந்தனர். "ப்ரகாஷ், குழந்தை..." "ஐஞ்சு நிமிஷம்" என்றவன், "இருங்க மேடம், டாக்டர் செக் பண்றாங்க..நீங்க பாத்துட்டு வாங்க..எதுவானாலும் வெளில வந்த பின்ன பேசிக்கலாம்" என்று வந்திருந்த ஏட்டம்மாவிடம் சொன்னான். அந்த அறையிலிருந்து வீல்னு ஒரு அழுகை. அறையின் மெலிஸ் வெளிச்சத்தில் ஒரு பிஞ்சு லாரியில் அடிபட்ட நாய்க்குட்டியாக சிதைந்து கிடந்தது. உடம்பு முழுவதும் முட் காயங்கள். உதடு கிழிந்திருந்தது. வலி தாங்காத அதன் ஓலம் மனதைப் பிசைந்தது. எந்த நாய் செய்த கோரத்தனம்? ச்ச...நாய் நன்றியுள்ளது. இது மனித இனத்தின் ஈனமே. உள்ளே நிற்க முடியாமல் வெளியே வந்தாள் ஏட்டம்மா. "ஏம்ப்பா எங்கேர்ந்து எடுத்தாந்தீங்க இதை? கொஞ்சம் விட்ருந்தா பூனை நாயெல்லாம் சாப்டிருக்கும். உயிர் பொழைக்குமா?" "எங்களால முடிஞ்சத பண்றோம் ஏட்டம்மா.." என்றான் ப்ரகாஷ். "ஏய் உங்க குழந்தை வந்தாச்சு டா" என்றான். "ஜனித்ரி! ஜனித்ரி!! வாம்மா..வந்து நம்ம போட்டோல செலெக்ட் பண்ண குழந்தைய பாரு மா...நல்லா இருக்கான் குழந்தை.