(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 15 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

நீரஜா நடனத்தையே விட்டுடப்போறதா செய்தி வந்திருக்கு பார்த்தீங்களா கமல் ? வீராவின் கேள்வியில் அசோக்கும், கமலும் நிமிர்ந்தார்கள்.

ம்... காரணமின்னு ஏதும் இல்லை ஏனோ என் மன உளைச்சல் காரணமா நடனத்தை தொடர முடியாதுன்னு ஸ்டேட்மெண்ட் வந்தது பார்த்தேன். வினிதா கையில் காபி கோப்பைகளை சுமந்து வந்தாள்

நீங்க ஏன் இதை எடுத்து வந்தீங்க கனகு கிட்டே கொடுத்து விட்டு இருக்கலாமே ?!

பரவாயில்லை ஸார்

நீங்க கொடுத்த மருந்து பாட்டிலை லேப்லே கொடுத்துட்டேன் அதில் சந்தேகப்படும் படியா கைரேகை ஏதும் இல்லை, ஆனா நல்ல மனநலம் உள்ள ஒருத்தரை அவங்க மனதை செயலிழக்க வைச்சு நம்ம கைப்பொம்மையா ஆக்கிக்கொள்ளும் அளவிற்கு அந்த மருந்துக்கு வீரியம் உண்டு. அதிலும் இன்னொரு முக்கியமான விஷயம், மாயாவோட கொலை வழக்கில் சந்தேகம் இருக்குன்னு ஸ்டே வாங்கியதில் அவங்களோட பிரேத பரிசோதனையில் மறைக்கப்பட்ட இன்னொரு விஷயமும் இருக்கு. .

அதுயென்ன ?

இறந்து போன மாயாவோட உடம்பிற்குள் நீங்க கொடுத்து மருந்து பாட்டிலின் திரவம் செலுத்தப்பட்டு இருக்கு, ஆனா மாயா..... வீராவின் வார்த்தைகளில் இருந்து வெளிவந்த விஷயத்தை கேட்டு அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்.

வினிதா இந்த டிரைவர் துரை எப்படி ? நம்பிக்கையான ஆளா

அவன் இப்போ சமீபகாலமாதான் வேலைக்கு சேர்ந்தான், ஒரு நிகழ்ச்சி முடிச்சிட்டு வரும்போது வண்டி மக்கர் பண்ணிடுச்சு. நடுராத்திரி நாங்க ரெண்டுபேரும் பெண்கள் எங்களால எதுவும் பண்ணமுடியலை, சந்துருவுக்கு போன் பண்ணினா நாட் ரீச்சபிள், அப்போ ஏதேச்சையா அந்தப் பக்கம் வந்தவன்தான் துரை. வேலையில்லாதவ பட்டதாரி. துரையோடது காதல் திருமணம், வீட்டுல ஏத்துக்கலை அதனால வெளியே வந்திட்டவங்க, நிறைமாத கர்பிணியான அவன் மனையியோட இதையெல்லாம் கேட்டதும், மாயாவுக்கு மனசு கேட்கலை உடனே கார் டிரைவரா வேலை போட்டு கொடுத்தாங்க. குழந்தை பிறந்தப்போ கூட செயின் போட்ட நினைவு. ஆனா பாவம் அந்தக் குழந்தை பத்து நாள்லேயே செத்து போச்சு, அந்தக் கவலையிலேயே அவன் யாரிடமும் பேசுவதில்லை, ஒருவாரம் வேலைக்கு கூட வரலை, மாயாவோட இறப்பிற்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மறுபடியும் வேலையில் ஜாயின் பண்ணினான்.

மாயா கமலை சந்திக்க வரும்போது துரையோட வந்ததா ஒரு ஸ்டேட்மெண்ட்டில் கூட சொல்லலை மிஸ்டர் கமல்.

மாயா இவனை வேலைக்கு சேர்த்ததே இரக்கப்பட்டுத்தான். மத்தபடி வெகு சில நேரங்களில் தான் இவன் மாயோட டிரைவிங்கில் போனதே, மத்தபடி எப்பவும் செல்ப் டிரைவிங்கதான். சந்துருவோடதான் இவனின் பாதிநாள் வேலையே, பர்வதம்மாள் எங்காவது கடைகண்ணிக்குப் போக கூட்டிப்போவாங்க நீங்க டிரைவர் துரையை சந்தேகப்படறீங்களா ?

சந்தேகம் சொல்ல முடியாது ஒரு சின்ன அசெம்ஷன், சரி அவனோட வீட்டை எனக்கு காட்ட முடியுமா ?

தாராளமா ?

சார் மாயா மாதிரியே அந்த பொண்ணு இருந்ததா சொன்னீங்களே இப்போ எப்படியிருக்காங்க ?!

ம்.. நல்லாயிருக்காங்க, தினம் தினம் அவங்க உடல் நிலை முன்னேறிகிட்டே வர்றதா டாக்டர் சொல்றார். கூடியவிரைவில் அவங்களை எதிர்பார்க்கலாம். அதிலும் காதல் காதல்ன்னு உருகுற கமலுக்காகவும் தான். மாயாவைக் கொன்னவங்களை பழிவாங்கனுமின்னு ஆத்திரப்பட்ட கமல் இப்போ பொட்டிப்பாம்பா அந்தப்பெண் கூடவே இருக்கார். கெளதம் மட்டும் இல்லைன்னா இந்தக் கேஸ் இன்னமும் சிக்கலாகத்தான் இருந்திருக்கும்.

நல்லவேளை மாயாவோட சேர்த்து கமலை யாரும் பார்த்தது இல்லை வினிதாவைத் தவிர, இல்லைன்னா இந்த கெளதம் கமலை மாறியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும். கமலோட நிலைமை தெரிந்து அசோக் எடுத்த முடிவுதான் சரி. நட்பிற்காக நிறைய ரிஸ்க் எடுக்கறீங்க அசோக்

கெளதம் துடிப்பான இளைஞன், என்னோட அசிஸ்டெண்டா சேர விரும்பியவன். கமல் இப்போ இருக்கிற நிலைமையிலே நம்மோட திட்டதிற்கு உதவுவானான்னும் தெரியலை, ஒருவேளை மாயாவை இவங்க படுத்தியது உணர்ந்து சந்துருவையும், பர்வதம்மாளையும் பார்க்கும்போது உணர்ச்சி வசப்படவும் வாய்ப்பிருக்கு, அதனாலதான் கமலுக்குப் பதிலா கெளதமை அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன். அவரும் சரியானபடி நடந்துக்கிறார். ஆனா என்ன முயன்றாலும் ஆரம்பித்த இடத்திற்கே தான் வந்து நிக்கிறோம் மாயாவோட கேஸில் இன்னும் குழப்ப முடிச்சிகள் உருவாயிகிட்டே தான் இருக்கு ?!

இறந்து போன மாயாவோட பிரேதபரிசோதனை ரிப்போர்ட் படி மாயா கன்னித்தன்மை இழந்தவங்க அவங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தற்கான அறிகுறிகள் இருக்குன்னு போட்டிருக்கு, அப்போ இது மாயா இல்லையா ?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.