(Reading time: 15 - 30 minutes)

“ப்பா.. மூணு பேரும் சாப்பிட்ட முட்டையெல்லாம் கண்ணுல வந்து நிக்கிது..எல்லாத்துக்கும் இப்படித்தான் ரியக்ஷன் தருவீங்களா? இல்ல என்கிட்ட எதையும் உளற கூடாதுனு இப்படி சைலண்ட் மோட்ல இருக்கீங்களா?” என்று கேட்டவள் தான் ஏற்கனவே போட்ட பீடிகைக்கும் பதிலைச் சொன்னாள்.

“மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். கல்யாணம்நின்னுட்டா ரெண்டு குடும்பத்தின் கௌரவமும் என்ன ஆகும்?இவ்வளவு செலவு பண்ணி, இவ்வளவு கஷ்டப்பட்டு  கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டு எப்படி நிறுத்துவாங்க.. ? இந்நேரம் என் தங்கச்சிக்கு கல்யாணம் நடந்திருக்கும்” என்று மீண்டும் அசால்டாக அவள் மற்ற மூவரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

“இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தால் நான் எப்படி சாப்பிடுறது? நீங்க முகத்தை இப்படி வெச்சுக்குறதுனால உங்கமூணு பேரையும் நம்பிடுவேன்னு நினைக்காதீங்க..” மீண்டும் லீலாவின் முகத்தில் கடுமை படர்ந்தது.

“அடிங்க.. யாரு இடத்துல வந்து யாரு சீன் ஐ போடுறது?” என மாரி படத்தின் வசனத்தை சொல்லித்தொலைக்க ஆசைப்பட்டான் கார்முகிலன். (ஹீ ஹீ ஆசைப்பட்டதோட சரி).

லீலாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் ருத்ரா. மற்ற மூவரைப் போல அவளிடமும் கோபத்தை காட்ட தோணவிலை லீலாவுக்கு.

“போகலாமா லீலா?” என்ற ருத்ராவின் அந்த இரண்டே வார்த்தைகள் வராத கோபத்தை வரவழைத்தன.

“ என்னங்கடா? அடுத்து என்ன ப்ளான்?” சற்றுமுன் கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசியவள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறத் தொடங்கினாள்.

“ அட என்னம்மா நீ? நீதானே கால எடுத்து ஒரு அடி வைக்க முடியலன்னு சொன்ன? நான் டாக்டர்தான் அதுக்காக கண்ணுல ஸ்கேன்னர் வெச்சுட்டா சுத்துவேன்? ஹாஸ்பிட்டல் போனாத்தான் என்ன பிரச்சனைனு தெரியும்? போதுமா விளக்கம்? எனக்கும் ரொம்ப டைம் இல்லை.. வா சீக்கிரம்” என்ற ருத்ரா லீலாவை கைதாங்களாய் அழைத்து செல்ல ஒருவரை நாட, கதிரவனே முதலில் அடியெடுத்து வைத்தான்.

“என்னை லவ் பண்ண மனசில்ல.. இன்னொரு பொண்ணுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணிடுவியா நீ? கைய புடிச்சிருவீயா?” என்று ருத்ரா பார்வையினாலேயே மிரட்ட பிரபஞ்சனுக்கு சிரிப்பு வந்தது.

“டேய் கார்கி” என்று அருகிலிருந்தவனிடம் கிசுகிசுத்தான்.

“என்ன மச்சான்?”

“என்னடா நடக்குது நம்ம வீட்டுல?”

“அத தான் நானும் யோசிக்கிறேன்”

“எப்பவுமே நாமத்தான் ஆங்க்ரி பேர்ட்ஸ்.. ஆனா நாமளே கம்முனு இருக்கோம்.. ஆனா இந்த ரெண்டு பொண்ணுங்களும் மொறைச்சே நம்மள மிரட்டுதுங்க பாரேன்..”

“ஆமா மச்சான்.. லீலா கூட தேவலாம். ஆனா ருத்ராவை பாரேன்.. கதிர் மட்டும் பட்டாசாக இருந்தான்னா அவளோட நெருப்பு பார்வைக்கு இவன் வெடிச்சே சிதறிடுப்பான்” என்று அடிக்குரலில் சிரித்தான் கார்கி.

“அப்படி அவன் வெடிச்சு சிதறருதுக்குள்ள போயி காப்பாத்து மச்சான்” என்று பிரபா கூற கார்முகிலன் பெரிய மனதுடன் லீலாவின் கரம் பற்ற முன்வந்தான்.

தன்னை காரில் ஏற்றிவிட்டு மூவரும் கைக்காட்டிய விதத்தில் லீலாவுக்கு மீண்டும் சந்தேகம் எழுந்தது.

“கண்டிப்பா திரும்பி வருவேன்.. ரொம்ப இளிக்காதீங்க..”என்று விரல் நீட்டி அவள் மிரட்ட மற்ற மூவரும் சிரிப்பை அடக்கி கொண்டு நின்றனர். கார் அவர்களது பார்வையில் இருந்து வெளியேறி சுயோதசேனாவை விட்டு வெளியேறிய மறுநொடி சொல்லி வைத்தாற்போல பிரபஞ்சனின் செல்ஃபோன் சிணுங்கியது. அதை எடுத்துக்கொண்டு அவன் துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைய மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

“சொல்றா மச்சான்” என்று அவன் உரக்க கேட்க கார்முகிலன், கதிரவன் இருவருமே “யாரிந்த மச்சான்னு தெரியலையேடா” என்று சொல்லிக்கொண்டே பொத்தென சோபாவில் விழுந்தனர்.

“ப்பா..என்னடா தலைவர் பெர்த்டே வெரைட்டியா கொண்டாடலாம்னு நினைச்சோம்..இப்படி வர்தாபுயல் மாதிரி ஆயிடுச்சே”

“கழுதைக்கு இப்போ ரைமிங் கேட்குது..” கதிரவன் கார்கியை வம்பிழுக்க,

“ஆனா நிஜமாவே மச்சான், வீட்டுல நாலாவதா ஒரு ஆளு வந்ததும்மூச்சே முட்டுது.. நாளைக்கு நீயும் ருத்ராவும் கல்யாணம் பண்ணிட்டீங்கன்னாதயவு செஞ்சு அவட் ஹவுசுக்கு தனிக்குடித்தனம் போயிருடா..எப்படியும் உன் வாய்க்கு அவ அடிக்கடி அடிச்சு துரத்திடுவா.. அப்போ மட்டும் வீட்டுக்குள்ள வா”என கார்கி அமர்த்தலாய் சொல்லனும்,

“அடிங்க நாயே.. வாய கழுவுடா.. கொன்னுடுவேன்” என்றான் கதிரவன். பெயருக்கேற்ற தோற்றமாய் அவன் முகம் சிவந்திட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.